23.6.20

நீங்களும் கிருஷ்ணரும்!!!!


நீங்களும் கிருஷ்ணரும்!!!!

*கிருஷ்ணரின்  வார்த்தைகள்*

*நீ அனுபவித்தால்!*

|| ராதேக்ருஷ்ணா ||

நீ க்ருஷ்ணனை கர்பத்தில் அனுபவித்தால்
உன்னை தேவகிக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை பிள்ளையாய் அனுபவித்தால்
உன்னை வசுதேவருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை குழந்தையாய் அனுபவித்தால்
உன்னை யசோதைக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை மாட்டுக்காரனாக அனுபவித்தால்
உன்னை நந்தகோபருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை காதலனாய் அனுபவித்தால்
உன்னை கோபிகைகளுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை தகப்பனாக  அனுபவித்தால்
உன்னை ருக்மிணிக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை பார்த்தசாரதியாய் அனுபவித்தால்
உன்னை அர்ஜுனனுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை நண்பனாய் அனுபவித்தால்
உன்னை உத்தவருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை தூதுவனாய் அனுபவித்தால்
உன்னை பாண்டவர்களுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை தெய்வமாய் அனுபவித்தால்
உன்னை பீஷ்மருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை கீதாசார்யனாக அனுபவித்தால்
உன்னை சஞ்சயனுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை ஆபத்பாந்தவனாக அனுபவித்தால்
உன்னை த்ரௌபதிக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை ரங்கனாய் அனுபவித்தால்
உன்னை ஆண்டாளுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை நாராயணனாய் அனுபவித்தால்
உன்னை ராமானுஜருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை குருவாயூரப்பனாக அனுபவித்தால்
உன்னை மஞ்சுளாவுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை பாண்டுரங்கனாக அனுபவித்தால்
உன்னை புண்டலீகனுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை உடுப்பி க்ருஷ்ணனாக அனுபவித்தால்
உன்னை கனகதாஸருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை கிரிதாரியாக  அனுபவித்தால்
உன்னை மீராவுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை ஸ்ரீ நாத்ஜீயாக அனுபவித்தால்
உன்னை வல்லபாச்சார்யருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை பூரி ஜகந்நாதனாக அனுபவித்தால்
உன்னை க்ருஷ்ண சைதன்யருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை ராஸநாயகனாக அனுபவித்தால்
உன்னை ஜயதேவருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை அனந்த பத்ம நாபனாக அனுபவித்தால்
உன்னை மஹாராஜா ஸ்வாதித் திருநாளுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை ஸ்ரீமத் பாகவதமாக அனுபவித்தால்
உன்னை சுகப்ரம்மரிஷிக்கும்ப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை நாமஜபமாக அனுபவித்தால்
உன்னை ஹரிதாஸ்யவனுக்குப்  பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை ராதிகாதாஸனாக அனுபவித்தால்
உன்னை க்ருஷ்ணனுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனிடம் ப்ரேமையில் உன்னையே கொடுத்து
அவன் இஷ்டப்படி வாழ்ந்தால் உன்னை ராதிகாவுக்குப் பிடிக்கும் !

உன்னிடத்தில் இத்தனைபேர் ப்ரியம் வைக்கக் காத்திருக்க 
நீ ஏன் மனிதர்களின பொய்யான அன்பிற்காக ஏங்குகிறாய் !!!

க்ரிஷ்ணனிடம் சரணாகதி ஆகிவிடு !!

ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir nice thanks sir vazhga valamudan.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    கிருஷ்ணப் ப்ரேமையை நன்கு அநுபவிக்க முடிகிறது!
    கிருஷ்ணா பிறப்பு முதல் வேடன்(ராமாயண வாலி)அம்பால் இறக்கும் வரை உள்ள அவதாரம்
    அணு அணுவாக இரசிக்கத்தக்க பக்தி காவியமமல்லவா!🙏

    ReplyDelete
  3. Good evening sir,
    I love too much Lord krishna sir

    ReplyDelete
  4. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir nice thanks sir vazhga valamudan./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  5. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கிருஷ்ணப் ப்ரேமையை நன்கு அநுபவிக்க முடிகிறது!
    கிருஷ்ணா பிறப்பு முதல் வேடன்(ராமாயண வாலி)அம்பால் இறக்கும் வரை உள்ள அவதாரம்
    அணு அணுவாக இரசிக்கத்தக்க பக்தி காவியமமல்லவா!🙏/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!

    ReplyDelete
  6. /////Blogger sundari said...
    Good evening sir,
    I love too much Lord krishna sir/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com