16.4.20

Astrology: ஜோதிடமும் கடவுளின் பிடிமானமும்!


Astrology: ஜோதிடமும் கடவுளின் பிடிமானமும்!

தனக்கு ஜோதிடக்கலை தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகிவிட்டது.

துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு , போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு தன் கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான், கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்குத் தெரியவருகிறது. இதனால் தான் கற்ற கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ளமுடியவில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்தபின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா, ஜோதிடம் என்பது பொய்தானே எள்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா என்று கேட்கிறார்.

ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன், ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் கணிதத்தில் வரவில்லை அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னார் பாருங்கள் பதில்.

அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்து கொண்டால் பிறகு நான் எதற்கு??? இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு
தூக்கிவாறிப்போட்டது.

அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும். மீதி 1% கடவுளின் பிடியில்.....இந்த ரகசியமானது  பாரதம் பேசுகிறது நூலில் இருந்து.....!!!
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir excellent story those who trust and full devotion with lord palaniyappan can achieve success in Astrology sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Good observation, Sir. Hope you are completely okay now.

    ReplyDelete
  3. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir excellent story those who trust and full devotion with lord palaniyappan can achieve success in Astrology sir thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    Good observation, Sir. Hope you are completely okay now.///

    உடல் நலம் இப்போது பரவாயில்லை. ஆனாலும் மீண்டும் அடுத்த வாரம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். Previewற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. /////Blogger அடியேன் யுவராஜ் said...
    அருமை அருமை ஐயா//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com