19.3.20

Cinema ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே


தமிழ் நாட்டையே கலக்கிய பாடல்!
படம் 1957ல் வெளிவந்த முதலாளி திரைப்படம்

முதலாளி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். நடிகை தேவிகாவின் முதல் தமிழ்ப் படமும் இதுதான்!!!!

வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு பணத்தை வாரி வழங்கிய படமாகும்!!!!

முதலாளி
இயக்கம் வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்பு எம். ஏ. வேணு
எம். ஏ. வி. பிக்சர்ஸ்
கதை ஏ. கே. வெங்கட ராமானுஜம்
இசை கே. வி. மகாதேவன்
நடிப்பு எஸ். எஸ். ராஜேந்திரன்
டி. கே. ராமச்சந்திரன்
சிவசூரியன்
பக்கிரிசாமி
சி. கே. சௌந்தர்ராஜன்
தேவிகா
எம். என். ராஜம்
முத்துலட்சுமி
ராஜேஸ்வரி
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடு அக்டோபர் 22, 1957




ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்
படம் : முதலாளி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப்

பாடல் ஆக்கம்
கவி காமு ஷெரீப்:


=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

  1. முதலாலி படமும் ஏரிக்கரையின்மேலே பாட்டும் இன்றளவும் நீங்காத நினைவில் உள்ளது

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com