30.3.20

மாணிக்கவாசகர் என்னும் முதன்மை சிவபக்தர்!!!!


மாணிக்கவாசகர் என்னும் முதன்மை சிவபக்தர்!!!!

🌺🌺#மாணிக்கவாசகர்🌺🌺

மாணிக்கவாசகர் சிவபெருமானை நோக்கி #பத்துப்_பத்தாக திருவாசகத்தில் பாடுகிறார்.

அவை:

💠 பிரிவால் வருந்திய தலைவியின் தாய், அது குறித்து தோழியிடம் வினவுதல் போன்ற செய்திகள் அமைந்த பாடல்கள்

#அன்னைப்_பத்து

💠 தலைவி, குயிலை அழைத்து தலைவனிடம் தூது அனுப்பும் விதமாக, குயிலிடம் கூறுவது போன்ற பாவனையில் அமைந்த

பாடல்கள் #குயில்_பத்து

💠 சிவானுபவத்தை அனுபவித்த ஜீவன், முழுவதுமாக அதனை அனுபவிக்க ""யான் இன்னும் செத்திலனே!"" என இரங்கும் பாவத்தில் பாடியது

#செத்திலாப்_பத்து

💠 வேதநாயகனிடம் சரணாகதி புகும் கருத்தை தெரிவித்து பாடியருளியது

#அடைக்கலப்_பத்து

💠 கயிலைவாசனிடம் அருளைப் பெற்றிட ஆசைப்பட்டதை அறிவித்து பாடியது

#ஆசைப்_பத்து

💠 ஒப்பற்றவனின் அளப்பரிய பெருமையை வியந்து தனக்கு அருள்செய்த கருணையை வியந்து பாடியது

#அதிசயப்_பத்து

 💠 ஈசனுடன் இரண்டறக் கலக்கும் நாள் என்று கொலோ? என ஏங்கும் பாவனையில் அமைந்திருப்பது

 #புணர்ச்சிப்_பத்து

💠 "நான் பற்றிலேன்! இனி வாழாமையை வேண்டினேன்" என்ற பாவனையில் பாடியது

#வாழாப்_பத்து

💠 "இப்பிறப்பை விட்டு உன் திருவடி சேர்வதற்கு அன்பு கொண்டழைத்தால் என்ன?" என வினவி, ஆதரித்து அருள  விண்ணப்பித்த பாடல்கள்

#அருட்பத்து

💠 தில்லையில் மணிவாசகர் கண்ட ஆனந்தக்கூத்தை அறிவித்து பாடியருளிய பாடல்கள்

#கண்ட_பத்து

💠 எப்போதும் சிவானந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திட பாடி அருளியது

#பிரார்த்தனைப்_பத்து

💠 ஆத்மநிவேதனம் செய்தலாகிய அனைத்தையும் ஈசனிடம் ஒப்படைக்கும் பாவனையில் பாடியது

#குழைத்த_பத்து

💠 சிவானந்தம் மேலிட்ட நிலையை அறிவித்த பாடல்களாக அமைந்தவை

#உயிருண்ணிப்_பத்து

💠 சிவநெறியைச் சேராத எதனைக் கண்டாலும் அஞ்சும் நிலையை உரைப்பது

#அச்சப்_பத்து

💠 சிவனையும் சைவநெறியையும் சிக்கெனப் பிடித்த செய்தியை உரைப்பது

#பிடித்த_பத்து

💠 அனுபவ இடையீடு இல்லாமல் இன்பத்தில் இருத்திய ஈசனை புகழும் பாடல்கள்

#குலாப்_பத்து

💠 சிவானந்த மேலிட்டை சொல்லத் தெரியாது விம்மும் நிலையை உரைப்பது

#அற்புதப்_பத்து

💠 நீலகண்டனின் திருவடி தமது சென்னியில் (தலையில்) இருக்கும் சிறப்பை கூறுவது

#சென்னிப்_பத்து

💠 அடியார்களின் அழைத்துக் கொண்டு சிவபெருமான் உடைய திருவடியை நோக்கி பயணிக்கும் பாவணையில் பாடியருளியது

#யாத்திரைப்_பத்து

சிவ சிவ

#எம்பெருமானுக்கு_சமர்ப்பணம்
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. Good evening sir devotional information to here in a critical time thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. திருவாசகம், மாணிக்கவாசகர் கூற இறைவன் திருக்கரங்களால் எழுதப்பட்டது என்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம். மதம் மாற்ற வந்தோரை (G U Pope) மனம் மாற்ற வைத்த பெருமை உடையது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com