10.3.20

தி. நகர் உஸ்மான் சாலை வரலாறு!!!!


தி. நகர் உஸ்மான் சாலை வரலாறு!!!!

மதராஸ்  #உஸ்மான்_சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? இதோ.........
--------------------------------------------------
"முதல் தலைமுறை மனிதர்கள்".

மதராஸ், தி.நகரில் வணிக  நிறுவனங்கள் நிறைந்த #உஸ்மான் #
சாலைகளில் நடந்து செல்லும்போது, " #யார்_இந்த_உஸ்மான்"
என்ற கேள்வி  எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் 
சிந்தியுள்ளார் ஆசிரியர்.
ஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் "முஸ்லீம்களின் அரசியல் பரிணாம  வளர்ச்சி" என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

#உஸ்மான் - ஒரு சுருக்கச்  செய்தி : கான் பகதூர் சர் #முகமது_உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 - 1960.
பிரிட்டிஷ்  இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் 
பெற்றார்.

1913 ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள்.
1924ல் சென்னை மாநகராட்சி மேயர்.
1916 - நீதிக்கட்சி தோற்றம் - உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு - 1919 திருச்சி 
மாநாட்டுத் தலைவர்.
1920 முதல் சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைக்க
1934 வரை  சட்டமன்ற உறுப்பினர்.
1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாகசபையின் துணைத்தலைவர்.
1932 - 34  சென்னை மாகாண உள்துறை அமைச்சர்.

1934ல் சென்னை மாகாண கவர்னர், Governor of Madras Presidency - 
Acting.
இதன்மூலம் இந்தியமாகாணங்களிலேயே கவர்னர் பதவி வகித்த #முதல்_இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் - 
அத்துடன் #முதல்_தமிழர்,
#முதல்_முஸ்லீம் என்ற பெருமையும் கூட. அந்த வருடம் சென்னை சென்னைப் பல்கலையில்  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

சென்னைப்  பல்கலைக்கழக வரலாற்றில் #இந்தியர்_ஒருவர் "வேந்தர்"
என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு 
இதுவே ஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்
பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் 
நிலைக்கு உயர்ந்த #உழைப்புதான்.

1941ல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர், Member of Defence Council of India.
1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்,
Member of the Executive Council of Viceroy of India. இக்குழுவில் 
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர் சி.பி.இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர்.

1920 ல் கான் சாகிப் பட்டம்.
1921 ல் கான் பகதூர் பட்டம்.
1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம்.
1928 ல் இங்லாந்தின் உயரிய  "நைட் - Knight " விருது.
அதே ஆண்டில் "சர் - Sir" பட்டம்.

KCSI - Most exalted Order of the Star of India, Knight 
Commander Order of
           Chivalry - Founded by Queen Victoria in 1861.

இதுபோல் தமிழகத்தின் 30  ஆழுமைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட 
வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படாத ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

Thanks for the information:
வெளியீடு : நிலவொளி பதிப்பகம், சென்னை.
#முகநூல்_பதிவு
நெய்வேலி சார்லஸ்
---------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. good evening sir,

    MY shopping centre, nice place always for me if i go there i will be happy sir.
    nalli silk house is like my lakshmi temple.

    ReplyDelete
  2. /////Blogger sundari said...
    good evening sir,
    MY shopping centre, nice place always for me if i go there i will be happy sir.
    nalli silk house is like my lakshmi temple.///////

    நல்லது. தகவலுக்கு நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com