18.2.20

குறைகளோடு படைக்கப்பெற்றவர்கள்தான் நாம் அனைவரும்!!!!


குறைகளோடு படைக்கப்பெற்றவர்கள்தான் நாம் அனைவரும்!!!!

♥திருமணம் முடித்த ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் கவலைப் படாதீர்கள்..

♥ கணவன் சரி இல்லையே என்ற கவலையா??? பெண்களே கவலைப் படாதீர்கள்! உங்கள் தாயாரும் ஒரு கட்டத்தில் அப்படி கவலைப் பட்டவர் தான்..கணவனை திருத்தும் திறமை உங்களுக்கு உண்டு என நினையுங்கள்...

♥ மனைவி சரி இல்லை என்ற கவலையா? ஆண்களே கவலைப் படாதீர்கள்! எந்த ஆணுக்கும் 100% விருப்பமான மனைவி கிடைத்ததில்லை... மனைவியை புரிந்து கொண்டு நடக்கும் மனம் வேண்டும் என நினையுங்கள்...

♥குழந்தை இல்லையே என்ற கவலையா....??? கவலைப் படாதீர்கள்! தாய் தகப்பன் இல்லாமல் இருக்கும் பல குழந்தைகள் உங்களுக்காகவே காத்திருக்கிறார்கள் பல இல்லங்களில்...

♥பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! உங்கள் கஷ்டங்களை பிள்ளைகளிடம் மறைக்காமல் வெளியே தெரியும் படி கஷ்டத்தை உணர்த்துங்கள்..

♥சொந்த வீடு இல்லையே என்ற கவலையா??? கவலைப் படாதீர்கள்! இறுதியில் நம்மோடு வரப் போவது எதுவும் இல்லை என நினைத்து வாழும் வரை மகிழ்ச்சியாக வாழுங்கள்....

♥தீராத நோய் என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! மனதில் எந்த நோயும் இல்லை என சந்தோசப் படுங்கள் சுகமடைவீர்கள்....

♥பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! நாளைய பெற்றோராக நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்ற பாடமாக அதை எடுங்கள்....

♥படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா??? கவலைப் படாதீர்கள்! இன்றைய உலக பணக்காரர்கள் 90% மாணவர்கள் படித்த வேலை கிடைக்காது கிடைத்த வேலையை செய்தவர்களே...

♥உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...??? கவலைப் படாதீர்கள்! யாரும் உங்களுடன் கூடப் பிறக்கவில்லை என நினைத்து விடுங்கள்...

♥திருமணம் ஆகவில்லையே எனக் கவலைப் படுகிறீர்களா? உங்களுக்கான சிறந்த துணை காத்திருக்கிறது என நினையுங்கள்.. விரைவில் சிறந்த துணை அமையும்...

♥கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால், அவர்கள் முதுகில் குத்தி விட்டார்களா? கவலைப் படாதீர்கள்! உங்களின் கஷ்ட காலம் அவர்களோடு போய் விட்டது என நினையுங்கள்...

♥ உம்மீதும், குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா? கவலைப் படாதீர்கள்! உலகின் பல சிறந்த மனிதர்கள் மிக கேவலமான துன்புறுத்தலை எதிர் கொண்டவர்கள் தான்....

♥மொத்தத்தில் தன் மனைவியை கணவனை குழந்தையை சகோதரர்களை பெற்றவர்களை கொலை செய்யும் இவ்வுலகம்  நம்மை மட்டும் தங்க தராசிலா வைக்கப் போகிறார்கள்!

♥மனிதர்கள் அப்படித் தான்! *எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!* சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை! ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித் தான் வரும்!. எனவே மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு இறைவன் அருளியதை பொருந்திக் கொண்டு வாழ்வோமாக.

♥ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு குறையுடனே படைக்கப் பட்டுள்ளான். எல்லாம் பெற்றவர் இவ்வுலகில் எவரும் இல்லை.
-----------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. Good morning sir excellent words for nowadays thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice post...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. //////Blogger Shanmugasundaram said...
    Good morning sir excellent words for nowadays thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!!

    ReplyDelete
  4. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post...
    Have a great day.
    With regards,
    Ravi-avn////

    நல்லது, நன்றி ரவிச்சந்திரன்!!!!!!

    ReplyDelete
  5. அருமையான பதிவு அய்யா 🙏

    ReplyDelete
  6. அருமையான மன ஆறுதல் ஊட்டும் பதிவு.

    அன்பும் நன்றியும் ஐயா.
    ====================
    அன்புடன்
    விக்னசாயி.
    ===========================

    ReplyDelete
  7. ////Blogger வகுப்பறை said...
    அருமையான பதிவு அய்யா 🙏/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  8. ////Blogger Balu said...
    True sir/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  9. /////Blogger vicknasai said...
    அருமையான மன ஆறுதல் ஊட்டும் பதிவு.
    அன்பும் நன்றியும் ஐயா.
    அன்புடன்
    விக்னசாயி./////

    நல்லது. உங்களீன் பின்னூட்டத்திற்கு நன்றி விக்னசாயி!!!!


    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com