7.11.19

மலரும் நினைவுகள்!!!!


மலரும் நினைவுகள்!!!!

உச்சகட்ட தீபாவளி...கைக்கு எட்டியது உடுத்த கிடைக்குமா...🤔

தீபாவளி ஜவுளிக்கான லோன் கிடைக்குமா..என்ற ஒரு குண்டை போட்டார் அப்பா...😔😞

ஒரு வாரம் சோகமாய் இருந்த வீடு சந்தோசமானது லோன் கிடைத்ததாய் அப்பாவிடமிருந்து வந்த செய்தியால்...

எப்பொழுதும் போல கோ.ஆப்.டெக்சில் தான் ஜவுளி...

எங்கள் அனைவருக்கும் ஸ்கூல் யூனிபார்ம் எடுத்திடலாம் என்றார் அப்பா...😭😭 அழுது அடம் பிடித்து கலர் சட்டைக்கு அப்ரூவல் கிடைத்தது அம்மாவின் சிபாரிசில்😀😃

அப்பா சைக்கிளில்🚲 செல்ல நாங்கள் எல்லோரும் டவுன் பஸ்ஸில் சென்று சேர்தோம்..ஒரே கூட்டம் கடையில்👬👫👯♀👨👩👧

எப்படியோ வேட்டி..சேலை..சட்டை..டவுசர்..பாவாடைதுணி என வாங்கியது போக மீதியில் இரண்டு ஜமுக்காளமும் வாங்கியாச்சு..

பட்டாணி..உப்புகடலை..பக்கோடாவுடன் வீடு வந்து சேர்தோம்..

ஒரு நாள் பூராவும் தெருவே வந்து பார்த்துபோனது எங்கள் வீட்டு ஜவுளியை...

டேய் ஜெயபால் டைலரிடம் கொடுத்திருக்கேன் போய் அளவு கொடுதிடுங்க. நல்லா லூசா கொடுங்கடா இரண்டு மூன்று வருடம் வர்றமாதிரி என்றார் அப்பா..

லேட்டஸ்ட் பாபி ஸ்டைல் நீண்ட ரவுண்டு காலர்..இரண்டுபக்கமும் மூடி வைத்த பாக்கட் என அளவு கொடுத்தாச்சு.🧥👚
👕👔 அனைவருக்கும் ஒரேமாதிரி கலர்.அதற்கு பெயர் family uniform..

தினமும் பள்ளி விட்டு டைலர்கடை வழியாகத்தான் சுற்றி வருவோம். தீபாவளிக்கு மூன்று நாள் முன்பு வரை கட்டிப்போட்ட துணி அப்படியே பண்டலாக இருந்தது..பிரிக்கவே இல்லை...

தச்சாச்சா என்று கேட்டோம் தீபாவளிக்கு முதல் நாள் வா என்றார் டைலர்..

தீபாவளிக்கு முதல் நாள் அன்று பள்ளி அரை நேரம்தான்.மதியம் சாப்பிட்டுவிட்டு நான்கு மணிவாக்கில் சென்றுகேட்டோம்...வெட்டியாச்சு தையல் ஒடிக்கிட்டிருக்கு ராத்திரி சாப்பிட்டு எட்டு மணிக்குவா என்றார்...டைலர்.

விடிந்தால் தீபாவளி..கிடைக்குமா கிடைக்காதா திக்.. திக்..என்று இருந்தது. உண்மையிலேயே வெட்டிதச்சிருந்தா பிட்டுகள் கீழே கிடக்கிறதா என பார்தோம்.. கிடந்தன துண்டுகள்..சந்தோசமாய் இருந்தது😆😆

இரவு சாப்பிட்டு சற்று தாமதாக சென்றோம்.ஓன்பது மணி..தெருவில் சிலர் மத்தாப்பு  புஸ்வாணம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்..நாய்கள்வேற அங்கங்கே குறைத்தது...🐕🐕

கடையைசென்று சேர்தோம்..உட்காருங்கபா இதோ பட்டன்கட்டி காஜா எடுத்தாவுது..ஒரு அரைமணிநேரம் ரெடியாயிடும் என்றார் .

காஜாபையன் தூங்கிவழியவே பளார் என ஒரு அடி விட்டு போய் டீ வாங்கிட்டுவா என சொம்பை கொடுத்தார்..பாதியில் விட்டுவிட்டு விட்டால்போதும்என கிளம்பியவன் வர வெகுநேரமானது...😇😇

#பெட்ரூமாஸ் லைட் வெளிச்சம்...
#தையல்மிஷின் ஓடும் சத்தம்...
#மர்பி ரேடியோவில் விவத்பாரதியின் தேன்கிண்ணம்...🎻🎻
#பி.பி.சீனுவாசின் ரம்மியமான இரவு பாடல்..
#M.A.Jacob..ன் கார்பட் விளம்பரம்..
#புளிய மர காற்று..
#எங்கோ கேட்கும் ஓரிரண்டு வெடி சத்தம் ''
ரம்மியமாக இருந்தது..அந்த சூழல்...

ஒருவழியாக தினத்தந்தி பேப்பரில் சுற்றி மேலே நூற்றிஇருபது ரூபாய் கூலி என எழுதிக்கொடுத்தார்.

இரவு பதினோருமணி வீடு வந்துசேரும்போது...🤸♀🤸♀

ஒரே ஒரு குறை அயன்பண்ணி தரவில்லை😕😕

சட்டையை அழகாக மடித்து பாய்க்கும் தலையணக்கும் இடையில் வைத்தால் அயர்ன் செய்தது போல இருக்கும்..

கைக்குஎட்டியது ஒரு வழியாக கட்ட கிடைத்து விட்ட சந்தோசம்😀😃😄😁

அடுப்பில் அம்மா சுடும் முருக்கு..அதிரசம்..சோமாஸ் வாசனையில் விடிந்தால் தீபாவளி கொண்டாடபோகும் மகிழ்ச்சியில் கண்உறங்கினோம்😔😔

அந்த தீபாவளியை யாராவது பார்தால் அனுப்பிவையுங்களேன்!!!!!
.🙏🏻🌾🌾🙏🏻
ஆம். தீபாவளியை எதிர்பார்த்த மகிழ்ச்சியும் தீபாவளி முடிந்தபின் எதோ நண்பனை பிரிந்தாற்போன்ற சோகமும் இன்னமும் நினைவில்.... !!!!!!
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. ////Blogger kmr.krishnan said...
    well written Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  2. நன்று அய்யா எங்களுக்கு கிடைத்த அனுபவம் அப்படியே

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com