18.3.19

அந்தக் காலத்தைப் பற்றி சுஜாதா அசத்தலாகச் சொன்னது!!!


அந்தக் காலத்தைப் பற்றி சுஜாதா அசத்தலாகச் சொன்னது!!!

1. கிழிந்த dressஐ தைத்து போட்டது அந்தகாலம், தைத்த dessஐ கிழித்து போடுவது இந்தகாலம்..

*சுஜாதாவை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்*

அந்தக் காலம் தான் நன்றாக இருந்தது....!

2. ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு

3. பேருந்துக்குள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் .,

4. மிதி வண்டி வைத்திருந்தோம்.,

5. எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.

6. ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

7. KB படங்கள் என்றால் ஒரு மாதம்அலசுவோம்

8. எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.

9. கல்யாண வீடுகளில் பந்திப் பாய் போட்டு சாப்பாடு

10. கபில் தேவின் கிரிக்கெட். FANTASTIC 5 நாள் MATCH

11. குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது.

12  எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது

13. வீடுகளின் முன் பெண்கள் காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்

14. சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்

15. தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரு மாதத்துக்கு முன்பே  தயாராவோம்

16. புது SCHOOL UNIFORM தான் சிலருக்கு DEEPAWALI DRESS

17. டான்ஸில் ஆபரேஷன்தான் பெரிய ஆபரேஷன் நிறையப் பேர்கள் பண்ணிக் கொண்டார்கள்

18. வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

19. எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,

20. சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,

21. மழை நின்று நிதானமாக பொழியும்

22. தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,

23. வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்கும் பாரமாயில்லை.,

24. எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

25. வெஸ்ட் இன்டீசை  வெல்லவே முடியாது.,

26. சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,

27. அம்மா பக்கத்தில் உறங்கினோம்

28. கொளுத்தும் வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்தோம்

29. முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,Shaving 50 பைசா

30. பருவப் பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர் - ,சிலிண்டர் மூடுதுணி போல்  யாரும் நைட்டி அணிய வில்லை.,

31. சுவாசிக்க காற்று இருந்தது., குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,

32. தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே  நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

33. டாக்டர் வீட்டுக்கே வருவார்

34. காதலிப்பது த்ரில்லிங்கா  இருந்தது

35. சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்

36. மயில் இறகுகள் குட்டி போட்டன...புத்தகத்தில்.,

37. ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அப்பாவிடம் அடி வாங்கினோம்..,

38. மூன்றாம் வகுப்பிலிருந்து  மட்டுமே,ஆங்கிலம்.,

39. ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.,

40. மொத்தத்தில் மரியாதை இருந்தது..

தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

படித்ததில் மனதை உருக வைத்தது....
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே!
    எழுத்துக் கூர்மை எங்கள் அதிரடி சுஜாதா தான், அன்றும், இன்றும்!
    மனதில் தோன்றியதை பயமில்லாமல் வரைந்த மாமன்னன்!
    அவர் சொல்லியுள்ள நாற்பதில் ஒன்று கூட இன்று இல்லயே!?
    அனைத்தும் " அந்தக்கால வரலாறு"
    ஆகிவிட்டதே!!?
    வருத்தம்தான் மேலிடுகிறது?!
    எனன சொல்லி என்ன பயன்?

    ReplyDelete
  2. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    எழுத்துக் கூர்மை எங்கள் அதிரடி சுஜாதா தான், அன்றும், இன்றும்!
    மனதில் தோன்றியதை பயமில்லாமல் வரைந்த மாமன்னன்!
    அவர் சொல்லியுள்ள நாற்பதில் ஒன்று கூட இன்று இல்லயே!?
    அனைத்தும் " அந்தக்கால வரலாறு"
    ஆகிவிட்டதே!!?
    வருத்தம்தான் மேலிடுகிறது?!
    எனன சொல்லி என்ன பயன்?/////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com