6.2.19

எதைத் தேட வேண்டும்?


எதைத் தேட வேண்டும்?

1. வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,  மன அமைதியையும் தேடுங்கள். மனிதனுடைய தேவைகள் ஒரு போதும் தீர்ந்து விடப் போவதில்லை.

2. அடுத்தவர்களை நாம் திருத்த முயற்சிப்பது தான் கடினம். நம்மை நாமே திருத்திக் கொள்வது சுலபம்.

3. நாம் செய்யும் நல்லதில் மட்டுமே பங்கு கொள்ளாது, நம் தவறான செயல்களையும் சுட்டி காட்டிடும் நண்பர்கள் வாழ்க்கையில் அவசியம்.

4. கவலைகளுக்கான காரணத்தைத் தேடாமல் சந்தோஷத்திற்கான வழிகளைத் தேடுங்கள்.

5. சந்தோஷமோ சோகமோ யாரிடம் எல்லாம் சொல்லனும்னு தோணுதோ அவர்கள் தான் உண்மையான உறவுகள்.

6. பணத்தின் மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும். உங்களுடைய மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும்.

7. தான் செய்த தவறுகளுக்காக தன்னிடமே நியாயம் கேட்டு மனப் போராட்டம் நடத்துபவர்களை யாரும் எளிதில் தோற்கடித்து விட முடியாது.

8. நடுத்தர மக்களுக்கு கஷ்டங்களை சமாளிப்பதை விட கஷ்டங்கள் இல்லாத மாதிரி காட்டிக் கொள்வதே பெரும் கடினமாய் இருக்கிறது.

9. நம்மை எதுவும் தெரியாதவர் என பிறர் நினைத்துக் கொள்வது ஒரு வகையில் நல்லது தான்.

10.  நாம் அக்கறை வைத்து உள்ள உறவினர்கள் எப்படியோ போகட்டும் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியவில்லை.

படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir excellent words thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    பணத்தின் மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும். உங்களுடைய மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும்.
    இன்றைய பதிவின் மேற்கண்ட
    வார்த்தைகள் ஆராதிக்கப்பட வேண்டியவை
    ஏனெனில் அவை எக்காலத்துக்கும்
    பொருந்த கூடியவை!

    ReplyDelete
  3. Respected Sir,

    Pleasant morning... nice post.

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir excellent words thanks sir vazhga valamudan///

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    பணத்தின் மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும். உங்களுடைய மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும்.
    இன்றைய பதிவின் மேற்கண்ட வார்த்தைகள் ஆராதிக்கப்பட வேண்டியவை
    ஏனெனில் அவை எக்காலத்துக்கும் பொருந்த கூடியவை!////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning... nice post.
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  7. வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மன அமைதியையும் தேடுங்கள். மனிதனுடைய தேவைகள் ஒரு போதும் தீர்ந்து விடப் போவதில்லை.நன்று,...

    ReplyDelete
  8. ////Blogger Digitallife said...
    வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மன அமைதியையும் தேடுங்கள். மனிதனுடைய தேவைகள் ஒரு போதும் தீர்ந்து விடப் போவதில்லை.நன்று,...////

    நல்லது. நன்றி நண்பரே! உங்கள் பெயர் என்ன?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com