28.2.19

கடவுள் இல்லை என்று யார் சொன்னது?


கடவுள் இல்லை என்று யார் சொன்னது?

ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...

ஒரு சின்ன குழந்தை (கையில் தூக்கு வாளியுடன்): அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம்...

ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... (குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்...

நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....

ஹோட்டல் நடத்துபவர்: அட சாப்பாடுதானே சார்....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?

படித்ததில் பிடித்தது...
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. வணக்கம் குருவே!
    உள்ளம் நிறைந்தது, அய்யா!
    கடைக்காரர் முதல் போட்டு நடத்தினாலும் பிஞ்சுகுழண்டையின்
    பசியை உணர்ந்து அதைப் போக்க
    முயற்சிக்கும் அவர் நிச்சயமாக
    கடவுள் தான்! பணத்திற்காக கொடுப்பதை விட குழந்தையின்
    மனத்திற்கு அல்லவா விலை தந்தார்!
    இதுபோன்ற மனித உள்ளங்கள் உள்ளவரை சூரியனும், சந்திரனும்
    நமக்கு நன்மையே அளிப்பர் என்பது
    உறுதி!

    ReplyDelete
  2. Good morning sir excellent such a honorable person we can see God in such a person thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. Respected sir,

    Good morning sir. Good message today. Who said No God? Kavingar Kannadasan, in one of his songs, Kadavul irukkindrar athu un kannukku therigendratha... Like it is not visible, but instances like a small message like today, we can believe God is there.

    Thank you for your good message.

    regards,

    VISVANATHAN N

    ReplyDelete
  4. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    உள்ளம் நிறைந்தது, அய்யா!
    கடைக்காரர் முதல் போட்டு நடத்தினாலும் பிஞ்சுகுழந்தையின்
    பசியை உணர்ந்து அதைப் போக்க
    முயற்சிக்கும் அவர் நிச்சயமாக
    கடவுள் தான்! பணத்திற்காக கொடுப்பதை விட குழந்தையின்
    மனத்திற்கு அல்லவா விலை தந்தார்!
    இதுபோன்ற மனித உள்ளங்கள் உள்ளவரை சூரியனும், சந்திரனும்
    நமக்கு நன்மையே அளிப்பர் என்பது
    உறுதி!//////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  5. //////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir excellent such a honorable person we can see God in such a person thanks sir vazhga valamudan///////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. Good message today. Who said No God? Kavingar Kannadasan, in one of his songs, Kadavul irukkindrar athu un kannukku therigendratha... Like it is not visible, but instances like a small message like today, we can believe God is there.
    Thank you for your good message.
    regards,
    VISVANATHAN N//////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    Touching the heart.//////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  8. ////Blogger kittuswamy palaniappan said...
    Arumai sir/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com