20.2.19

பட்டினத்தாரைப் பற்றி கவியரசர் சொன்னது!!!


பட்டினத்தாரைப் பற்றி கவியரசர் சொன்னது!!!

*கவிஞா் கண்ணதாசன் சொல்கிறாா்:*
✍✍✍✍✍✍✍✍
*ஞானம் பிறந்த கதை:  பட்டினத்தாா் சொல்கிறாா்:*
😌😌😌😌😌😌😌😌😌

புனித மண்டபத்திற்குள் இந்த பூத உடல் நுழைந்தது.

சமணர்களும், பிறரும் கூட காலில் விழுந்து வணங்கக் கூடிய துறவியாக, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருந்தாா் சிவானந்தயோகி. நான் அவா் காலில் விழுந்து வணங்கினேன். அவா் கண்ணைத் திறந்து பாா்த்தாா். நான் விவரங்களைச்  சொல்லவே இல்லை; அவரே சொன்னாா்.

*"தண்ணீாில் குளிப்பவனுக்கு நெருப்புச் சுடும்; நெருப்பிலே குளிப்பவனுக்கு தண்ணீா் சுடும்; இரண்டுக்கும் நடுவிலே*
*உட்காா்ந்திருப்பவனுக்கு இரண்டுமே சுடும்.  போகி நீாிலே* *குளிக்கிறான்.  யோகி நெருப்பிலே* *குளிக்கிறான். ரோகி நடுவிலே நிற்கிறான்; நீ*  *போகத்துக்குத் திரும்ப நினைத்தால் முடியாது;*
*ரோகத்திலேதான் விழ வேண்டி இருக்கும்."* அவா் பேசி முடித்தாா்.

என்னை ஆசிா்வதித்தாா். இடது காதிலே ஒரு மந்திரத்தைச் சொன்னாா். அவா் அதைச் சொல்லும் போது, வலது காதிலே ஒரு வைணவ மந்திரம் கேட்டது.  *"பிரம்மம் ஒன்றே"* என்பதை அது உணா்த்திற்று.

அந்த லயத்திலேயே நான் புறப்பட்டேன்.  மடத்தின் வாசலில் திருவோடு இல்லாதவா்களுக்கு அழகான திருவோடுகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தாா்கள். அது ஒரு வகை தா்மம்.

அந்தத் திருவோட்டை கையில் வாங்கிக் கொண்டு ஊரே என்னை வேடிக்கை பாா்க்கும் நிலையில் நேரே என் தாயாாின் இல்லத்துக்கு
வந்தேன். முதல் பிச்சையைத் தாயின் கையிலே தான்
வாங்க வேண்டும்.

*"வீடிருக்க, தாயிருக்க, வேண்டுமனை யாளிருக்க,
பீடிருக்க, ஊணிருக்க, பிள்ளைகளுந் தாமிருக்க,
மாடிருக்க, கன்றிருக்க வைத்த பொருளிருக்க,
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே?"*  ..... என்று ஆயிரக்கணக்கானவா்கள் வேடிக்கை பாா்க்க, தாயின் முன்னாலே நின்று, *"தாயே பிச்சை"*  என்று கோஷம் கொடுத்தேன்.

கையில் ஏதும் இல்லாமல் வந்த என் தாயாா், என்னைப் பாா்த்து சிாித்தப்படி, *"மகனே இன்னும் நீ பணக்காரனா"* என்றாா்கள்.  *"ஏன் தாயே அப்படிச் சொல்கிறீா்கள்?"* என்றேன்.  *"வீடு உனக்கு அந்நியமாகி விட்டது; ஆனால், ஒரு ஓடு உனக்கு சொந்தமாகி விட்டதே!"* என்றாா்கள்.

*"எனக்கு ஐந்தாவது ஞானம் பிறந்தது"*

அந்த ஓட்டைத் தூக்கி
தூக்கியெறியப் போனேன்.

*"நில், அந்த ஓட்டை வைத்துக் கொள்.  ஆனால், அதன் மீது பாசம் வைக்காதே!"*  அது காணாமல் போனால், *"என் ஓடு எங்கே?" என்று தேடாதே!"* என்றாா்கள். பிறகு பிச்சை இட்டாா்கள்.

அடுத்தது மனைவியின் இல்லம்; அவள் கண்ணீராலே பிச்சையிட்டாள். .
-----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. Good morning sir very interesting to hear thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very interesting to hear thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com