22.1.19

ஆஞ்சநேயரும் வடைமாலையும்!!!!


ஆஞ்சநேயரும் வடைமாலையும்!!!!

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் வடை மாலையும்!!!!

1,00,008 வடை தயாரிக்கும் பணி தீவிரம்.

  மார்கழி திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம்1,00,008 வடை
மாலை சாத்தப்பட உள்ளது. அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு
காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கு காலை 11 மணிக்கு பால் மற்றும் பல் வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்
நடை பெற உள்ளது. மதியம் 1 மணிக்கு தங்க கவசஅலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்!

   ஆஞ்சநேயர் க்கு  மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட உள்ளது.

 வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திரு.ஸ்ரீதர் (பேட்டி) கூறுகையில் :-

  ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 32 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். 2250 கிலோ உளுந்த மாவு, 600 கிலோ நல்லெண்ணெய், 
36 கிலோ மிளகு, 36 கிலோ சீரகம், 25கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடை தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல்நாள் மதியம்
தொடங்கும் இந்த பணி அடுத்த நாள் இரவு நிறைவடையும் என்றார். ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் இது

போன்று வடை மாலை சாத்துவது வழக்கம்!!!!

-----------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. வணக்கம் குருவே,
    இராம பக்த ஹநுமான் ஜயந்தி உத்ஸவம் பற்றிய தொகுப்புக்கு
    நன்றி ஐயா!👌💐

    ReplyDelete
  2. இந்த நாள் இந்த வரும் கடந்து சென்று விட்டது. விவரங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  3. Dear Sir,

    Nice to see the story of anjaneya,

    Thanking you,

    C. Jeevanantham

    ReplyDelete
  4. அய்யா
    இப்பொழுதெல்லாம் தாங்கள் forward message ஆக பதிவுசெய்கிறிர்கள். தாங்கள் சொந்த பதிவுகளை அதிகமாக வெளியிட கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  5. Respected Sir,

    Pleasant morning... Nice post...

    Thanks for sharing...

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    இராம பக்த ஹநுமான் ஜயந்தி உத்ஸவம் பற்றிய தொகுப்புக்கு
    நன்றி ஐயா!👌💐

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger ஸ்ரீராம். said...
    இந்த நாள் இந்த வரும் கடந்து சென்று விட்டது. விவரங்கள் சுவாரஸ்யம்./////

    ஆயிரக்கணக்கான வடைகள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்ற சுவாரஸ்யமான விவரங்களுக்காகத்தான் பதிவு!!!!

    ReplyDelete
  9. ////Blogger Unknown said...
    Dear Sir,
    Nice to see the story of anjaneya,
    Thanking you,
    C. Jeevanantham/////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!!!!

    ReplyDelete
  10. /////Blogger Kalai Rajan said...
    அய்யா
    இப்பொழுதெல்லாம் தாங்கள் forward message ஆக பதிவுசெய்கிறிர்கள். தாங்கள் சொந்த பதிவுகளை அதிகமாக வெளியிட கேட்டு கொள்கிறேன்/////

    1,100 பதிவுகளுக்குமேல் எனது ஜோதிடப் பதிவுகளும், அதே எண்ணைக்கையில் வேறு சொந்தப் பதிவுகளும் உள்ளன அவற்றை எல்லாம் படித்துவிட்டீர்களா நண்பரே?

    ReplyDelete
  11. ////Blogger siva kumar said...
    நன்றி ஐயா/////

    நல்லது. நன்றி நண்பரே !!!!!!

    ReplyDelete
  12. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning... Nice post...
    Thanks for sharing..
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com