25.11.18

கஜ புயலின் தாக்கமும் சேவாலயாவின் ஆக்கமும் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍


கஜ புயலின் தாக்கமும் சேவாலயாவின் ஆக்கமும்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍================================================
நமது வகுப்பறையின் மூத்த மாணவர் ஒருவரின் வேண்டுகோளை அப்படியே பிரசுரித்துள்ளேன். அதனைப் படித்து உங்களால்
முடிந்த உதவிகளை அவருக்கும், அவர் சார்ந்திருக்கும் சேவாலயா நிறுவனத்திற்கும் நல்க வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
======================================
திரு KMRK அவர்களின் கடிதம் தொடர்கிறது:

சேவாலயா 30 ஆண்டுகளாக இயங்கிவரும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.அதனைத் துவங்கி  நன்கு வழிநடத்திவரும் திரு முரளிதரன் அவர்களை 30 ஆண்டுகளாக அறிவேன்.10 அனாதை/ஏழைச் சிறுவர்களுடன் துவங்கிய சேவாலயா, இன்று 2100 பிள்ளைகள் படிக்கும் மேல்நிலைப்பள்ளி,
200 ஆண்,பெண் அனாதை/ஏழைப் பிள்ளைகளுக்கான விடுதி,
80 முதியவர்க‌ள் வசிக்கும் இலவச முதியோர் இல்லம், 12 படுக்கைகள் உள்ள‌ மருத்துவமனை,80 கிரமங்களுக்குச் சென்று வைத்தியம் செய்யும் மூன்று நடமாடும் மருத்துவ வேன்கள்,பல்வேறு இடங்களில் கைத்தொழில் பயிற்சி அளிக்கும் சமுதாயக்கல்லூரிகள், 80 மடி வற்றிய‌ பசுமாடுகள்  உள்ள கோசாலா,இயற்கை வேளாண்மை,பேரிடர் மேலாண்மை....
இப்படிப் பல சேவைகள் செய்து வரும் ஓர்
அனுபவமிக்கத்  தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.

சுனாமி, சென்னை வெள்ளம், ஒக்கி புயல், வார்தா புயல், இப்போது கஜாபுயல் ஆகிய நேரங்களில் விறைந்து சென்று உடனடித் தேவைகளும், நீண்ட நாள் நிவாரணமும் அளித்துள்ளோம்.

தஞ்சாவூரில் நான் 38 ஆண்டுகள் வசித்தேன். அங்கிருந்த
என் வீட்டை விற்று கடன்கள் அடைத்தது போக , 8000 சதுர அடி
பிளாட் வாங்கிப்போட்டேன்.அதில் பாதியை இரண்டாண்டுகளுக்கு முன்பாக சேவலயாவிற்கு தானமாகக் கொடுத்துவிட்டேன்.அந்த இடத்தில் சேவாலயா ஒரு 20 பேருக்கான முதியோரில்லம் துவங்கி கடந்த மூன்று மாதமாக நடத்தி வருகிறது.(சேவாலயாவின் காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு இலவச முதியோர் இல்லம்.) காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் எனது மறைந்த தந்தையார். சுதந்திரப்போராட்ட வீரர்.

 கட்டிடம் பாதியளவில் நிற்கிறது.(படத்தில் காண்க)


ஆகவே சேவாலயாவின் கிளை இப்போது தஞ்சாவூரில் இயங்கி வருகிறது.

கஜ புயல் வந்து தாக்கியவுடனேயே உணவுத் தேவை இருக்கும் என்று யூகித்து மூன்று நாட்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து வினியோகித்தோம்.

பின்னர் மளிகைப்பொருட்கள்,டார்பாலின், அரிசி, டார்ச் லைட், மெழுகு வர்த்தி,போர்வை, போன்ற அத்தியாவசியப் பொருட்களை விலை கொடுத்து வாங்கி சீராகப்பிரித்து புயல் சேதம் அதிகம் இருந்த வேதாரண்யம், தலைஞாயிறு,, கோடியக்காடு பகுதிகளுக்கு வேனில் எடுத்துச் சென்று வினியோகித்தோம்.

அனுபவம் காரணமாக வழியில் கும்பல் வழிமறித்துப் பிடுங்கும் என்பதை யூகித்து காலை 3.30 மணிக்கே கிளம்பி வேதாரண்யததை
6 மணிக்குச்சென்று அடைந்தோம்.சுமார் 300 குடும்பங்களுக்குப் பொருட்களாக வினியோகித்தோம்.

கஜ புயலின் அழிவின் தாக்கம்  அளவிடமுடியாதது. எனவே எவ்வளவு உதவி கிடைத்தாலும் அதனைப்பெற்று ஏழை எளிய மக்களுக்குக் கொண்டு செல்லத் தயாராக உள்ளோம்.

உதவிக்கரம் அளியுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என் மின் அஞ்சல் முகவரி.:kmrk1949@gmail.com  தொலை பேசி 90475 16699

தொடர்பு கொண்டால் நன்கொடை அனுப்பவேண்டிய வங்கிக்கணக்கு எண் அனுப்புகிறேன். உங்கள் நன்கொடைக்கு வருமானவரி விலக்கு 80G பிரிவின் படி உண்டு.எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் அனுப்புங்கள். நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!அதுவுமற்றவ்ர் வாய்ச்சொல் அருளீர்! ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!

மிக்க நன்றி!
K.முத்துராம கிருஷ்ணன்  (KMRK)
=======================================================


=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. Many Thanks Sir.Even if ten people respond, it will serve the purpose of publishing this appeal. Friends ! please donate generously

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com