15.10.18

என்ன சொன்னார் சாக்ரடீஸ்?


என்ன சொன்னார் சாக்ரடீஸ்?

சாக்ரடீஸ் ஒருமுறை கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.

நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்தார்.
எதுவும் வாங்கவில்லை.

பின்னர்,

மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார்.

இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் பல கடைகளை சுற்றிப் பார்த்து விட்டுச்சென்று விடுவார்.

ஏழாம் நாள்...

சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்,

"அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள், கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள், ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை! உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ்,

அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே... இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை! 'இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே!' என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்...", எனக் கூறினாராம்.

கடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்!

ஆம், நமது வாழ்க்கைக்கு தேவைப்படாத பொருட்கள் நம்மிடம் இருப்பதை விட இல்லாத போது தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும்...

ஆகவே, ஆடம்பர மோகத்தில் அத்தியாவசியத்தை தவற விட்டு விடக்கூடாது...

நமது நாட்டின், வீட்டின் வளர்ச்சியும் அப்படி தான் இருக்க வேண்டும்...

சிந்திப்போம்...வாழ்க்கையை சீரமைப்போம்...

*வாழ்க நலமுடன்...*
----------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. Good morning sir fact and important msg for us thanks sir vazhgha valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    அட்டகாசம்! என்ன மாறுபட்ட
    சிந்தனை!!சிந்திப்பதிலும் விந்தை!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Nice post.

    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir fact and important msg for us thanks sir vazhgha valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  5. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அட்டகாசம்! என்ன மாறுபட்ட
    சிந்தனை!!சிந்திப்பதிலும் விந்தை!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  6. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post.
    Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    Very nice////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  8. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

    என்னை வெளி நாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஒரு ப்ராஜக்டுக்கு தேர்வு செய்தார்கள். இதற்காக நான் வேலை செய்துக்கொண்டிருந்த ப்ராஜெக்டை விட்டு வந்தேன். எனக்கு முன்பு நிற்ண‌யிக்கப்பட்டிருந்த சம்பளம் மிகக்குறைவு என்பதால் இந்த புது வாய்ப்பு எனக்கு மிக்க மனமகிழ்வை தந்தது. நானும் கணவு கான ஆரம்பிதுவிட்டேன். ஆனால் நான் ப்ராஜெக்ட் மாறியதும் என்னை வெளினாட்டிற்கு அனுப்ப யோசிக்கின்றனர். மனவருத்ததுடன் இங்கே வந்தால், இப்படிஒரு கதை.

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

    ReplyDelete
  9. ////Blogger Indian said...
    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
    என்னை வெளி நாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஒரு ப்ராஜக்டுக்கு தேர்வு செய்தார்கள். இதற்காக நான் வேலை செய்துக்கொண்டிருந்த ப்ராஜெக்டை விட்டு வந்தேன். எனக்கு முன்பு நிற்ண‌யிக்கப்பட்டிருந்த சம்பளம் மிகக்குறைவு என்பதால் இந்த புது வாய்ப்பு எனக்கு மிக்க மனமகிழ்வை தந்தது. நானும் கணவு கான ஆரம்பிதுவிட்டேன். ஆனால் நான் ப்ராஜெக்ட் மாறியதும் என்னை வெளினாட்டிற்கு அனுப்ப யோசிக்கின்றனர். மனவருத்ததுடன் இங்கே வந்தால், இப்படிஒரு கதை.
    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...////

    எல்லாமே கடந்து செல்லும் (மேகத்தைப் போல)
    பொறுமையாக இருங்கள்!

    ReplyDelete
  10. ////Blogger Indian said...
    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
    என்னை வெளி நாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஒரு ப்ராஜக்டுக்கு தேர்வு செய்தார்கள். இதற்காக நான் வேலை செய்துக்கொண்டிருந்த ப்ராஜெக்டை விட்டு வந்தேன். எனக்கு முன்பு நிற்ண‌யிக்கப்பட்டிருந்த சம்பளம் மிகக்குறைவு என்பதால் இந்த புது வாய்ப்பு எனக்கு மிக்க மனமகிழ்வை தந்தது. நானும் கணவு கான ஆரம்பிதுவிட்டேன். ஆனால் நான் ப்ராஜெக்ட் மாறியதும் என்னை வெளினாட்டிற்கு அனுப்ப யோசிக்கின்றனர். மனவருத்ததுடன் இங்கே வந்தால், இப்படிஒரு கதை.
    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...////

    எல்லாமே கடந்து செல்லும் (மேகத்தைப் போல)
    பொறுமையாக இருங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com