27.8.18

இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?


இறைவனிடம்  என்ன கேட்க வேண்டும்?

குட்டி கதை

ஒரு "ராஜா" தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.

திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்.

மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்.

ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது.

காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்.

மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள்.

எங்கிருந்தோ "ஆறு இளையர்கள்" வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்.

மந்திரியுடன் ஆறு இளையர்களும் "ராஜாவிடம்" வருகிறார்கள்.

"ராஜாவும்" மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,

”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்.

"முதல்" இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்.

"இரண்டாவது" இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்.

"மூன்றாவது" இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.

"நான்காவது" இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்.

"ஐந்தாவது" இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்.

அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன "ராஜா",

"ஆறாவது" இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்கிறான்.

இளைஞன் சற்று தயங்குகிறான்,

"ராஜா" மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,

"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்.

வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்.

"ராஜாவும்" இவ்வளவுதானா என்று முதலில் கேட்டான்.

பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை. தெரிந்து கொண்டான்...

ஆம்.

"ராஜா" அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால், அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும். அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். வேலைக்காரர்கள் வேண்டும். அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். சொல்லப் போனால் முதல் "ஐந்து" இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும். என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,

என்று . . . ,இந்தக் கதையை முடித்தார் பேச்சாளர்.

இந்தக் கதையில் கூறிய "ராஜாதான்" அந்த "இறைவன்".

பொதுவாக எல்லோரும் "இறைவனிடம்"கதையில் கூறிய , முதல் "ஐந்து" இளைஞர்களைப் போல், தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்.

கடைசி இளைஞனைப் போல் "இறைவனே"நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பதற்கு, எடுத்துக் காட்டாக இந்தக் கதையைக் கூறினார்!!!
---------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. வணக்கம் ஐயா,அருமை.ஆனால் எல்லோரும் இதையே கேட்டால் இறைவன் என்ன செய்ய முடியும்.நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    குட்டிக் கதை என்றாலும் சுட்டிக் கதை!நல்ல கருத்தை எளிமையான முறையில் சொல்லப்படுகிறது! தங்களின்
    தேர்வல்லவா! சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றீர்கள்!
    நன்றி ஐயா!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Excellent post. Thanks for sharing...

    This story indicates Mahabarat story when Dhuriyothana asked all senas of Krishna but Arjuna asked Krishna himself.

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான கதைதான்.

    ReplyDelete
  5. //////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete

  6. /////Blogger Rajkumar Periyasamy said...
    Nice message sir!!////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  7. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமை.ஆனால் எல்லோரும் இதையே கேட்டால் இறைவன் என்ன செய்ய முடியும்.நன்றி./////

    கோடிக்கணக்கான அவதாரங்களை நொடியில் எடுத்து கூப்பிடும் அனைவருடனும் வந்துவிட மாட்டாரா என்ன?

    ReplyDelete
  8. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    குட்டிக் கதை என்றாலும் சுட்டிக் கதை!நல்ல கருத்தை எளிமையான முறையில் சொல்லப்படுகிறது! தங்களின்
    தேர்வல்லவா! சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றீர்கள்!
    நன்றி ஐயா!//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  9. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Excellent post. Thanks for sharing...
    This story indicates Mahabarat story when Dhuriyothana asked all senas of Krishna but Arjuna asked Krishna himself.
    Have a great day.
    With regards,
    Ravi-avn//////

    உண்மைதான். நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  10. ////Blogger ஸ்ரீராம். said...
    சுவாரஸ்யமான கதைதான்./////

    நல்லது. நன்றி ஸ்ரீராம்!!!!!

    ReplyDelete
  11. ////Blogger SELVARAJ said...
    அருமை அருமை...//////

    நல்லது. நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  12. அருமை சார் நல்ல குட்டி கதை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com