5.7.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய இரண்டு காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய இரண்டு காணொளிகள்!

1.

சிரியாவில் ஒரு ரிப்போர்ட்டர், ஒரு தாயை இழந்த  குழந்தையிடம் கேட்கிறார், 'உன் அம்மாவை நீ மிஸ் பண்ணுகிறாயா..??'

அதற்கு அந்தக் குழந்தையின் பதில் எந்தக் கல் நெஞ்சத்தையும் சிதறடிக்கும்!

வெடித்து சிரிக்கும்போதே விம்மி அழுகும் இந்த பிஞ்சு உள்ளத்தில் பொதிந்து இருக்கும் துன்பங்களுக்கு யார் காரணம்? எது காரணம்?

இதுமாதிரி உலகெங்கும் எத்தனை நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றனவோ .....?

வேதனையாக இருக்கிறது.

சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார் , *நான் சிரித்துக்  கொண்டே அழுகிறேன்*.
சிவாஜியின்  பாவனையையும் மிஞ்சிவிட்டது இந்த சிறுவனின் முகபாவம்........!


-----------------------------------------------------------------------
2

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை!

காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த
வீடோ? புறந்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.
         
என்ற பாடலின் மூலம் பட்டிணத்தார் அருமையாகச் சொன்னார்

ஆனாலும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா தன் சிறு உரையின் மூலம் மரணம் எங்கே நிகழ்வது நன்றாக இருக்கும் என்பதை அழுத்தந்திருத்தமாக தனது இலங்கைத் தமிழில் அழ்குபட்ச் சொல்கிறார். நீங்களும் கேளுங்கள்

செத்தாலும் சொந்த ஊர்ல சாக வேணும் .... அப்பப்பா......என்ன தமிழ் பேச்சு ... மெய் சிலிர்க்குது.....


-----------------------------------------------------------
பார்த்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. வணக்கம் குருவே!
    எவ்வளவு எளிதில் அக்குழந்தையின்
    முகபாவம் மாறியது,அம்மாவின்
    நினைவு வந்தவுடன்!? கல்மனமும்
    கரைந்து விடும், அக் கண்ணீரின் முன்! அப்பப்பா!
    கேஎம்ராஜாவின் இலங்கைத் தமிழில்
    விலாசல் நல்ல ஈர்ப்பு!

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்
    அருமையான பதிவுகள்
    பட்டினத்தாரின் பிரிதிபலிப்போ!
    மறக்க முடியாத/கூடாத பதிவுகள்!!
    நன்றியுடன்
    பொன்னுசாமி

    ReplyDelete
  3. Respected Sir,

    Pleasant Morning... good post...
    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    அருமை/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  5. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    எவ்வளவு எளிதில் அக்குழந்தையின்
    முகபாவம் மாறியது,அம்மாவின்
    நினைவு வந்தவுடன்!? கல்மனமும்
    கரைந்து விடும், அக் கண்ணீரின் முன்! அப்பப்பா!
    கேஎம்ராஜாவின் இலங்கைத் தமிழில்
    விலாசல் நல்ல ஈர்ப்பு!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  6. ///////Blogger ponnusamy gowda said...
    ஐயா வணக்கம்
    அருமையான பதிவுகள்
    பட்டினத்தாரின் பிரிதிபலிப்போ!
    மறக்க முடியாத/கூடாத பதிவுகள்!!
    நன்றியுடன்
    பொன்னுசாமி//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!!!!

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant Morning... good post...
    Thanks for sharing...
    Have a great day
    With regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  8. Respected Sir, the first boy video disturbed me so much, so googled and found that the background info is not true and quite relieved. This is an American boy on his first day of kinder garden and his Mother is alive. More info on this link https://m.youtube.com/watch?v=jZYuXzcK3Q8

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com