31.5.18

இவரல்லவா உண்மையான ஹீரோ!!!


இவரல்லவா உண்மையான ஹீரோ!!!

பாரிஸ் நகரின் ‘ஹீரோ’ வைப் பாராட்டுவோம் வாருங்கள்!

26-5-2018  சனிக்கிழமை அன்று இரவு 8 மணி இருக்கும். பாரிஸ் 18 ம் வட்டாரத்தில் உள்ள, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 4 வது மாடியிலே, நான்கு வயது குழந்தை ஒன்று தவறி கீழே விழப்போகிறது. ஆனால் தெய்வாதீனமாக அக்குழந்தை ஒரு கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருந்தது. எந்த நேரத்திலும் விழுந்துவிடும் என்கிற நிலை.

அப்போது கீழே இருந்த ஒரு கெபாப் உணவகத்தில் உதைபந்தாட்டப் போட்டியினைக் காண வந்திருந்த ஒரு இளைஞனுக்கு மக்கள் கூக்குரல் இடும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று வெளியே பார்த்தான். நிலைமை மோசம்.

உடனே மின்னல் வேகத்தில், வெறும் 32 மணித்துளிகளில் 4 ம் மாடிக்குத் தாவி ஏறிக் குழந்தையைக் காப்பாற்றி விட்டான். அந்த இளைஞனின் *பெயர்:* *Mamoudou Gassama.*

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இந்த இளைஞனின் வீரச் செயல்தான் இன்று பிரான்ஸ் முழுவதும் பேச்சு. ‘பாரிசின் ஹீரோ’ என ஊடகங்களும் மக்களும் போற்றிப் புகழ்கிறார்கள்.

பாரிஸ் முதல்வர் ஆன் இதால்கோ ‘ 18 ம் வட்டாரத்தின் ஸ்பைடர்மான்’ என்று புகழ்ந்துள்ளார்.

இந்த இளைஞனுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கோரிக்கைகள் குவிகின்றனவாம்...

உண்மையில் அசுர சாதனைதான்
-------------------------------------------
பார்த்தேன் பகிர்ந்தேன்

உங்களுக்காக அதன் காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Good morning sir very excellent thank you so much sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    தங்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள் இச் செய்தியினை தந்தமைக்கு!
    என்னவொரு வீரச் செயல்!!
    குழந்தையைக் காப்பாற்றிய அந்த
    அசாத்யத் துணிச்சல் உள்ள அந்த
    இளைஞர் நீடூழி வாழ்க என வாழ்த்தி விடை பெறுகிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com