28.2.18

எதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்?


எதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்?

அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில்
பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி
ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை
வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’
என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும்
கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’
என்று உத்தரவிட்டான்.

அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன்
பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான்.
அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி
வாழ்வீர்கள்’ என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான்.

இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும்
கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

பேசும் வார்த்தைகள் கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.! நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷம் படுத்த வேண்டுமே தவிர எந்த விதமனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

படித்தேன்; பகிர்ந்தேன்!!!   

அன்புடன்
வாத்தியார் 
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir very nice thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    உண்மை தான்!அரசனாகவோ அல்லது சாதாரண மனிதராகவோ
    இருந்தாலும நமக்கு வாக்கு ஒன்றுதானே!
    அடுத்தவர் மனம் நோகாமல் இருக்கும் வரை நமக்கு நல்லது!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,சிறப்பு.நன்றி.

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy afternoon... Wonderful post about speaking strategy...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    Very nice Sir/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    உண்மை தான்!அரசனாகவோ அல்லது சாதாரண மனிதராகவோ
    இருந்தாலும நமக்கு வாக்கு ஒன்றுதானே!
    அடுத்தவர் மனம் நோகாமல் இருக்கும் வரை நமக்கு நல்லது!//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சிறப்பு.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  9. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy afternoon... Wonderful post about speaking strategy...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn///////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  10. Yes guru this is true and true only. Toung is sharpener than knife. We will use good words for ever. Thanks guru

    ReplyDelete
  11. ////Blogger Kesavaraj & Kalaivani said...
    Yes guru this is true and true only. Toung is sharpener than knife. We will use good words for ever. Thanks guru////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com