11.12.17

Humour: நகைச்சுவை: டாக்டரை எதற்காக வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனான்?


Humour: நகைச்சுவை: டாக்டரை எதற்காக வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனான்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்.
-------------------------------------------------------------
ஒருவன் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டான் ...
டாக்டர், வீட்டுக்கு வந்து  பார்க்க என்ன பீஸ் வாங்குவிங்க?
அதற்கு டாக்டர் சொன்னார் 300 ரூபாய் வாங்குவேன் என்று.
உடனே அவன் டாக்டரிடம் .. அப்படியா, சரி, கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர் எங்க வீட்டிற்கு என்றான்.
டாக்டரும் அவனை தன்னுடைய காரில் அவன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய் சேர்ந்தார்.
டாக்டர் வீட்டில் நுழைந்ததும் கேட்டார்,
 நோயாளி எங்கே? என்று
அதற்கு நம்மாள் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார்.
 அப்படி என்ன தான் சொல்லிருப்பான் நம்மாள்?
V
V
V
V
V
V
"நோயாளி எல்லாம் இங்க இல்லைங்க டாக்டர் இந்த மழைல ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேட்டாங்க. நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்.
-------------------------------------------------
2
90 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடும்பத்தினர்
இந்த விசயத்தை அவரிடம் எப்படி சொல்வது.....
திடீர்னு... சொன்னா ஒருவேளை ...அதிக சந்தோஷத்துல ...“ பொசுக்குன்னு போய்ட்டார்னா ”
யோசனை செஞ்சு பாத்துட்டு...ஒரு டாக்டர் கிட்ட போனாங்க..

விசயத்தை கேட்ட டாக்டர் “ ஒ...அவ்வளவுதானே.. ...நீங்க ஒண்ணும்... கவலைப் படாதீங்க நா.... பாத்துக்கிறேன் ” எப்புடி...அவர பக்குவமா...பேசி...நான் சரி பண்றேன்னு மட்டும் பாருங்க....பேசி மடக்குறதுலே...நான் ..பெரிய எக்ஸ்பர்ட் ஆச்சே...

ஊர்க்கதை எல்லாம்..பேசிட்டு மெல்லமா “ஐயா ஒரு பேச்சுக்கு கேட்கறேன்....உங்களுக்கு லாட்டரியில 50 கோடி விழுந்தா என்ன ...பண்ணுவீங்க.... ”

அதுக்கு அந்த வயசானவர், என்ன...டாக்டர் சார் இப்புடி கேட்குறீங்க...

நீங்க ஆஸ்பிடல் கட்டுறீங்க இல்லையா ...உங்களுக்கு ஒரு அம்பது லட்சத்தை...தூக்கி குடுப்பேன்...”
அவ்வளவு தான்... படார்னு ஒரு...சத்தம்...டாக்டர் இருதயத்த புடிச்சிட்டு விழுந்தவர் தான்.. எழுந்திரிக்கவே இல்ல..
---------------------------------------------------
3
கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது, மனைவி சற்று தொலைவில் இருந்து விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....
Banaras Saree Rs 10/-
Nylon Saree Rs 8/-
Cotton Saree Rs 5/-

மனைவி : "500 ரூபாய் பணம் கொடுங்கள்.. நான் 50 புடவை வாங்கணும்.."

கணவன் : "அது இஸ்திரி போடும் கடை எரும மாடு...!!!
------------------------------------------------
4
கணவன் : நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..
மனைவி : ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..
கணவன் : அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா..
மனைவி : ???!!!!!!
--------------------------------------------------
5
மனைவி : என்னங்க பின்னாடி ஒருத்தன் என் காலை சுரண்டுறான்.
கணவன் : கொஞ்சம் திரும்பி உன் முகத்தை காட்டு சுரண்டவே மாட்டான்.
---------------------------------------------------------------------------------
6
 ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
ராமு : பின்ன என்ன செய்யணும்?
ரவி : கடிக்க... ஏதாவது?
ராமு : நாய் இருக்கு... அவுத்துவிடவா?
-------------------------------------------
7
மனைவி: என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள்...கோழி அடிச்சு குழம்பு வெக்கட்டும்மா..?*
*கணவன்: நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்குற...*
*மனைவி: 😡😡😡
--------------------------------------------------------,
8
*குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்*.
*கவலை படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம்.*
*கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர் சரக்கு சிந்துது*
----------------------------------------------------
9
அதிக குசும்பு பிடித்த ஒருத்தர், சென்ட்ரல் ரயில்நிலையத்தில் அருகிலிருந்தவரை கேட்டார்.
ஹெளராஹ் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?
10.30 மணி.
பெங்களூர் மெயில்?
11.25.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்?
1.15.
சதாப்தி எக்ஸ்பிரஸ்?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு.
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்?
பொறுமையிழந்த அவர், நீங்கள் எந்த ஊருக்குப் போக வேண்டும்?
நான் எந்த ஊருக்குப் போகவில்லை, தண்டவாளத்தைத் தாண்டணும் அதான் கேட்டேன்
-----------------------------------------------
10
 *நீதிபதி* : பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி...போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?
*திருடன்* : பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது  எசமான்.
------------------------------------------------
11
*கரண்டி ரொம்ப_ "வெயிட்டு*"*என்பது, கடையில வாங்கும்* *போது தெரியாது!
*வீட்ல**"வாங்கும்"போது தான்**தெரியுது* *என்னா அடி*
-------------------------------------------------
12
பொன்னு பார்க்க போணியே என்னாச்சு....?


ஒன்னும் செட் ஆவலை...அதான் ஜோசியரை கேட்டேன், ஆறு மாசம் போனா அதுவா அமையும்னு சொல்லிட்டாரு...!


சொல்லிட்டாரா...அப்ப போயி ஒரு ஆறு மாசமாவது சந்தோசமா வாழற வழிய பாரு.....
-------------------------------------------------------
13
"நம்பிக்கை தான் வாழ்க்கை"ன்னு தத்துவமெல்லாம் பேசுறான், பேனா கேட்டா மட்டும்  மூடிய கழட்டிட்டு தான் கொடுக்குறான், நம்ம மேல அம்புட்டு நம்பிக்கை.
----------------------------------------------------------------
இந்தப் பதிமூன்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Good morning sir all are very nice thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Respected sir,

    Good morning sir. Thank you for your jokes. No.1 is Sl.NO.1, rest of the jokes are also good. Sl.No.2,6 & 10 is very good.

    regards,

    Visvanathan N

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... All are excellant...

    Thanks for sharing ...

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,எனது ப்ரியாரிட்டி 1,3,7,8.......நன்றி.

    ReplyDelete
  5. அனைத்து நகைச்சுவையும் சுவையாக உள்ளது இனிய நகை சுவையை சுவைக்க வைத்த
    வாத்தியார் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. //Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir all are very nice thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete

  7. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. Thank you for your jokes. No.1 is Sl.NO.1, rest of the jokes are also good. Sl.No.2,6 & 10 is very good.
    regards,
    Visvanathan N////

    நல்லது. உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... All are excellant...
    Thanks for sharing ...
    With regards,
    Ravi-avn////

    நல்லது. உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!!

    ReplyDelete
  9. ////Blogger Saravanan V said...
    அருமை......../////

    நல்லது. உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!!

    ReplyDelete
  10. ///Blogger Maheswari Bala said...
    No 10////

    நல்லது. உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete
  11. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,எனது ப்ரியாரிட்டி 1,3,7,8.......நன்றி.////

    நல்லது. உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete
  12. ////Blogger csubramoniam said...
    அனைத்து நகைச்சுவையும் சுவையாக உள்ளது இனிய நகை சுவையை சுவைக்க வைத்த
    வாத்தியார் அவர்களுக்கு நன்றி////

    நல்லது. உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com