22.11.17

நகைச்சுவை: இறக்கும் தருவாயில் பிரித்துக் கொடுத்த சொத்துக்கள்!



நகைச்சுவை: இறக்கும் தருவாயில் பிரித்துக் கொடுத்த சொத்துக்கள்!

ஒரு மனிதன் சென்னை மருத்துவமனை அறையில் இறக்கும் தருவாயில் தன் மனைவி, மூத்த மகன், மகள், இளைய மகன் இவர்களிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்....

மூத்த மகனிடம் : மகனே நீ அண்ணா நகரில் இருக்குற 14 பங்களாக்களை பார்த்துக்கணும்.

மகளிடம்: மகளே நீ T-நகர்ல இருக்குற 18 கடைகளையும் பார்த்துக்கணும்.

இளைய மகனிடம் : சின்னவனே என் செல்லக்குட்டி நீதான்யா கிண்டில இருக்குற 26 கம்பெனிகளையும் பார்த்துக்கணும்.

மனைவியிடம் : கண்ணே உன்னைவிட்டு பிரியபோகிறேன்... மயிலபூர்ல இருக்குற 16 அப்பார்ட்மெட்டைகளையும் நீதான் பார்த்துக்கணும்

இவ்வாறு சொல்லிவிட்டு இறந்துவிட்டார்....

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இருந்த நர்ஸ் அவரின் மனைவியை பார்த்து, “நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க உங்க கணவர் அவரோட எல்லா சொத்தையும் உங்களுக்கு குடுத்துட்டு போயிட்டார்னு சொன்னாங்க....”

அதற்கு அவர் மனைவி சொன்னார்....

சொத்தா.....? எங்க கீது... பால் ஊத்துற பேமானிமா இது... கஸ்மாலம் பால் ஊத்துற ஏரியாவைப் பிரிச்சிக்குடுத்துட்டு பூடுச்சி....!!!!
-----------------------------------------------------------------------
2
ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?"

"எப்போ?"

"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி"

"ஓ, அதுவா சார் என் ஹஸ்பென்ட் தான் கூப்பிட்டார்."

"எதுக்கு?"

'தெரியலை சார்"

'சரி அவரை பேசச்சொல்லுங்க"

'அவர் இப்போ இங்க இல்லை சார்."

'சரி வந்தவுடனே பேசச் சொல்லுங்க'

'அவர் இப்போ உங்களைப் பார்க்கத்தான் வந்திட்டு இருக்கார்?"

"யாரு அவரு தெரியலயே?"

'அவரு என் ஹஸ்பெண்டு சார். நான் அவரோட வைஃப் ..என்னை உங்களுக்குத் தெரியாது. என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்."

"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?"

"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்"

"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்"

"அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்"

"சரி எங்கே இருந்து வர்றாரு?"

"எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு"

"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்"
..................................................................
"ஏண்டி, யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"

"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேங்க...அந்த நம்பர்லேர்ந்து ஒருத்தரு கூப்ட்டாரு.. அதான் டைம்பாஸ்... ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன்".

(ஹா..ஹா..ஹா.. பொண்டாட்டியா கொக்கா...! )
--------------------------------------------------
3

நான் : சென்னையில் நீங்கள் எந்த ஏரியா ?


அவர் : சென்னை மொத்தமுமே இப்ப
ஏரியாத்தான் இருக்கு
----------------------------------------------------
4
மனைவி : ஏங்க! சாதாரணமா இருக்கறப்ப முத்தே, மணியே-ன்னு கொஞ்சறீங்க.... குடிச்சா மட்டும் பேயே, பிசாசே-ன்னு திட்டுறீங்களே?

கணவன் : என்னடி பண்றது! போதை ஏறிட்டா எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது.
------------------------------------------------------------------
5
மனைவி : மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நம்ம மாட்டுக்கு என் கையால நானே பொங்கல் பண்ணி ஊட்டி விடணும்ங்க ?

கணவன் : நமக்கு நல்லது செய்யற வாயில்லா ஜீவனுக்கு நீ செய்யற பதில் நன்றி இதுதானா ?

மனைவி : ???
-------------------------------------------------------------------
6
மனைவி : டாக்டர், என் ஹஸ்பெண்ட் ராத்திரியெல்லாம் தூக்கத்துல பேசிகிட்டே இருக்கார். என்ன பண்ணறதுன்னே தெரியல...

டாக்டர் : அவரைப் பகல் வேளையில கொஞ்சம் பேசவிடுங்க.

மனைவி : ???
-------------------------------------------------------------------------
7
*டாக்டர் : வாங்க ,                உட்காருங்க ,               சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க ,           நாக்க நீட்டுங்க..          திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க ....இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?

*வந்தவர் :  ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!
------------------------------------------------------------------------------

மேலே உள்ளவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. Good morning sir all are very nice vazhga valamudan sir

    ReplyDelete
  2. Respected sir,

    Good morning sir. Thank you for your message as a jokes in today's publication in our classroom. OUt of 7 jokes, Sl.No.1, 6 & 7 are very enjoyable nature.

    regards,

    Visvanathan N

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... all are superb sir... especially No.6

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,மிகவும் பிடித்தது முதலில், 6 பிறகு 7.நன்றி.

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    All are humourous, Sir./////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  6. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir all are very nice vazhga valamudan sir/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  7. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. Thank you for your message as a jokes in today's publication in our classroom. OUt of 7 jokes, Sl.No.1, 6 & 7 are very enjoyable nature.
    regards,
    Visvanathan N/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!!

    ReplyDelete
  8. ////Blogger SELVARAJ said...
    1,2//////

    நல்லது. நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  9. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... all are superb sir... especially No.6
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  10. Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிகவும் பிடித்தது முதலில், 6 பிறகு 7.நன்றி.

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com