11.10.17

கவிதை: வைரமுத்துவின் வைர வரிகள்


கவிதை: வைரமுத்துவின் வைர வரிகள்

*எனக்குப்பிடித்த வைரமுத்துவின் வைர வரிகள்:*

*'கொல்'  'கொள்ளையடி'*
*சரித்திரம் அதிகம் கேட்ட* *வார்த்தைகள்*

*''தழுவு'' ''முத்தமிடு''*
*கட்டில்கள் அதிகம் கேட்ட* *வார்த்தைகள்*

*''ஆராரோ'' ''சனியனே''*
*தொட்டில்கள் அதிகம் கேட்ட* *வார்த்தைகள்*

*''உனக்கெப்போது கல்யாணம்?''*
*விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''*
*வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''இன்னொரு ஜென்மம்*
*என்றொன்றிருந்தால்''*
*பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''கடைசியாய் எல்லாரும்*
*முகம்பார்த்துக்* *கொள்ளுங்கள்''*
*மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'*
*மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'பாலாறு - தேனாறு'*
*பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''மறக்காமல் கடிதம் போடு''*
*ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''அய்யா குளிக்கிறார்''*
*தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'அப்பா கோபமாயிருக்கிறார்'*
*குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'*
*ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''நேற்றே வந்திருக்கக் கூடாதா''*
*கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'இனிமேல் ஆண்டவன் விட்ட வழி'*
*மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*போதுமடா சாமி!*
*போதும்! போதும்!*

*ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்*
*சாயம் போயின* *வார்த்தையின் நிறங்கள்*

*இனி ஒவ்வொரு சொல்லையும்*
*ஒட்டடை தட்டுவோம்*

*இனிமேல் வார்த்தைகளை*
*இடம் மாற்றிப் போடுவோம்*

*அத்தனை சொல்லிலும்*
*ஆக்சிஜன் ஏற்றுவோம்*

*வார்த்தை மாறினால்*
*வாழ்க்கை மாறும்*

*முதலில்*
*வாழ்க்கையிலிருந்து*
*வார்த்தையை மீட்போம்*
*பின்னர்*
*அர்த்தத்திலிருந்து*
*வார்த்தையை மீட்போம்*

*வாழ்வின் நீள அகலம் கருதி*
*வார்த்தைகளிலும் நாம்*
*மழித்தல் நீட்டல் செய்வோம்*

*மரித்தான் என்ற சொல்லை யெறிந்து*
*வாழ்வை வென்றான் என்று புகழ்வோம்*

*தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து*
*விலகி நிற்கும் வெற்றி*
*என்றுரைப்போம்*

*எதிரி என்ற வார்த்தை எதற்கு?*
*தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்*

*சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்*
*முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்*

*இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்*
*அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்*

*நொந்த தேகம் நோயில் விழுந்தால்*
*உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்*

*வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்*
*மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்*

*நிலவைத் தொலைத்த வானம் என்பதை*
*விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்*

*எதிர்மறை வார்த்தைகள்*
*உதிர்ந்து போகட்டும்*

*உடன்பாட்டு மொழிகள்*
*உயிர் கொண்டெழட்டும்*

*பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்*
*புதிய நிலத்தில் பதியன்போடுவோம்*

*புளித்த வார்த்தைகள் மாறும்போது*
*சலித்த வாழ்க்கையும்*
*சட்டென்று மாறும்*

-*வைரமுத்து*
*கவிப்பேரரசு
---------------------------------------------------------------
இணையத்தில் படித்ததைப் பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. Good morning sir supero super sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. அருமை. வார்த்தைகளிலும் நேர்மறை. அழகிய அறிவுரை.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Wonderful wordings....

    Thanks for sharing sir...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    வாழ்க்கையை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்திய வார்த்தைகள் என்றால் சரியா,வாத்தியாரைய்யா!!

    ReplyDelete
  5. அருமை. மாற்றம் வரட்டும் வார்த்தைகளில். வரவேற்போம்.
    கூடவே நம்மையும் திருத்திக் கொள்வோம்.

    ReplyDelete
  6. Sir, did you find if the medicine is working for any of known people to you?

    Refering to old post

    http://classroom2007.blogspot.com/2017/09/blog-post_70.html?m=1

    ReplyDelete
  7. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir supero super sir thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger ஸ்ரீராம். said...
    அருமை. வார்த்தைகளிலும் நேர்மறை. அழகிய அறிவுரை./////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  9. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Wonderful wordings....
    Thanks for sharing sir...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  10. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    வாழ்க்கையை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்திய வார்த்தைகள் என்றால் சரியா,வாத்தியாரைய்யா!!///////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  11. //////Blogger Thanga Mouly said...
    அருமை. மாற்றம் வரட்டும் வார்த்தைகளில். வரவேற்போம்.
    கூடவே நம்மையும் திருத்திக் கொள்வோம்.//////

    ஆமாம். அதுதான் முக்கியம். நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  12. /////Blogger Subathra Suba said...
    Super collections//////

    நல்லது. நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete
  13. /////Blogger JAYARAM said...
    அருமை சார்/////

    நல்லது. நன்றி ஜெயராம்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com