4.9.17

Humour: நகைச்சுவை: சிக்கலும் அதற்கான சிறந்த தீர்வும்!!!


Humour: நகைச்சுவை: சிக்கலும் அதற்கான சிறந்த தீர்வும்!!!

வேண்டுகோள்: நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!!!
--------------------------------------------------------------------------------------------
1
எல்லா டெஸ்ட்-க்கும்
படிச்சிட்டு🙄 போகணும்...!

ஐ 👁 டெஸ்ட்-க்கு
மட்டும் போயி படிச்சா போதும்🤓..!!

இப்ப தான்
கண்டுபுடிச்சேன்😉
--------------------------------------------------
2
நீதானேடி கடைக்கு போவ...என்னை ஏன் போக சொல்ற?

-லூசுங்க வாங்கினா ஜி எஸ் டி கிடையாதாம்.. நீங்க போய் வாஙகுங்க

-அடிப்பாவி... லூஸ்ல வாங்குனாத்தான் ஜி எஸ் டி கிடையாது...
------------------------------------------------------
3
மிக சுவையாக பேசக்கூடிய ஒரு பேச்சாளர் ஒருமுறை உரையாற்றும்போது....

"என் வாழ்வின் சிறந்த நாட்கள்...இன்னொருவரின் மனைவியோடு செலவழித்த நாட்களே"

பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துப்போனார்கள்

பேச்சாளர் தொடர்ந்து சொன்னது: "அது வேறு யாருமல்ல என் அம்மாதான்.....!

கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது.                

இந்த சொற்பொழிவை கேட்ட ஒருவர் இதை தன்வீட்டில் பரிசோதிக்கவிரும்பி தன் மனைவிடம் இரவு

சாப்பாட்டின்போது இப்படி சொன்னார்
.
 அன்பே நான் வாழ்க்கையில் செலவழித்த சிறந்தநாட்கள்; இன்னொருவரின் மனைவியுடன்.........  
..
கொஞ்ச நேரத்தில் அடுத்த வரியை சொல்ல அவர் நினைத்தபோது அவருக்கு நினைவு திரும்பி தான் ஒரு

மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தார்

அவரது உடல் முழுவதும் கொதிக்கும் சாம்பார் ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட தீக்காயத்தில் வெந்து போயிருந்ததை

புரிந்துக்கொண்டார்....
     
MORAL LESSON: Don't 'copy' others,  if you cannot 'paste' correctly!
--------------------------------------------------------
4
சிக்கலும் அதற்கான சிறந்த தீர்வும்!!!

ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார்:

பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே , ஏழு

ஜென்மத்துக்கும்  கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது .

என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் .

பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள் ,

ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும் திருப்தி செய்ய,

என்ன செய்ய வேண்டும் ..??

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் ,பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் ,அவர் பெயர்

சாணக்கியர், அவரைப் பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் .

சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் .

சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை .கடைசியாக , அந்த

கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து ,அவர்களிடம் பேசினார்கள் .

கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் அவரை கட்டிப்பிடித்து

வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்த

பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார் .

இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் கூறினார் . அதற்கு அந்த பெண்கள் சித்திரகுப்தனை

கையெடுத்து கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .

அப்படி என்னதான் தீர்வு .." அது " ..??

V
V
V
V
V
V
V
V
V
V
V
V

சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற கோரிக்கையை
ஏற்றுக்கொண்டார் , ஆனால்
ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் ....
---------------------------------------------------------
இந்த நான்கில் எது மிகவும் நன்றாக உள்ளது? அதைச் சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. Good morning sir very nice sir,3 and,4are very humerous thank sir vazhga valamudan

    ReplyDelete
  2. Good morning sir,
    All the four are very nice. Thanks for sharing. Why there is no information about guru peyarchi sir. Gocharam is only 25 percentage so it is not that much important like lagnam, navamsam chart sir.

    ReplyDelete
  3. கடைசி ஒன்று ... அந்த ஆண் எவ்ளோ பெரிய புத்திசாலி (கஷ்டபட்ட ) கணவனாக இருந்திருப்பான் ...

    ReplyDelete
  4. அன்பு ஐயா,
    நான்காமது சிரிப்போ சிரிப்பு.
    சிரிப்பு மழை.
    வாழ்வில்மகிழ்வித்து மகிழ்வது,இன்பம்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,நான்கும்,மூன்றும்.நன்றி.

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice sir,3 and,4are very humerous thank sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  7. ////Blogger gokila srinivasan said...
    Good morning sir,
    All the four are very nice. Thanks for sharing. Why there is no information about guru peyarchi sir. Gocharam is only 25 percentage so it is not that much important like lagnam, navamsam chart sir./////

    கோச்சாரத்தைவிட தசாபுத்திகள்தான் பலன்களைக் கொடுக்கும். நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    first one/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  9. /////Blogger KRIZ said...
    கடைசி ஒன்று ... அந்த ஆண் எவ்ளோ பெரிய புத்திசாலி (கஷ்டபட்ட ) கணவனாக இருந்திருப்பான் .../////

    உண்மைதான். அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்தவனாக இருந்திருப்பான். நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. //////Blogger Kesavaraj & Kalaivani said...
    அன்பு ஐயா,
    நான்காமது சிரிப்போ சிரிப்பு.
    சிரிப்பு மழை.
    வாழ்வில்மகிழ்வித்து மகிழ்வது,இன்பம்./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  11. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நான்கும்,மூன்றும்.நன்றி.////

    உங்களின் தெரிவைச் சொன்னதற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com