17.8.17

வருவாய் (Income) உங்களுக்கு சரளமாக வர வேண்டுமா?


வருவாய்  (Income) உங்களுக்கு சரளமாக வர வேண்டுமா?

வருவாய்  (Income) உங்களுக்கு சரளமாக வர வேண்டுமா?  கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்!!!!


கடவுளைத் தனிமைப் படுத்தி எந்தவொரு அம்சமாகவும் பார்ப்பது கடினம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் அவர். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் அவர்!

earth, space, time, light, என்று எல்லா வடிவமாகவும் இருப்பவர் அவர்.

அதைத்தான் அருணகிரியார் இப்படிச் சொன்னார்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
- அருணகிரி நாதர்
----------------------------------------------------------
உருவம் உடையவனாகவும்,
உருவம் இல்லாதவனாகவும்,
உள்ளவனாகவும்,
இல்லாதவனாகவும்,
மாற்றங்களுள்ளதாகவும்,
மலராகவும்,
ஒலியாகவும்,
ஒளியாகவும்,
கருப்பையின் கருவாகவும்,
அனைத்து ஜீவராசிகளின்
இயக்கத்திற்குரிய உயிராகவும்,
அடையும் நிலையாகவும்,
விதிக்கப்பட்டதாகவும்,
ஆசானாகவும்,
வந்து
அருள் செய்து
என்னை
ஆட்கொள்வாய்
குமரக் கடவுளே!
...........................................................
இறைவன் ஒருவன்தான். நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம். அருணகிரியார் குமரக்கடவுளின் வடிவமாக இறைவனை வணங்கினார். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாவுக்கரசர் போன்ற சிவபக்தர்கள் இறைவனைச் சிவ வடிவமாக வணங்கினார்கள்.

அதுபோல உங்களுக்குப் பிடித்த வடிவில் இறைவனை, எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் வணங்கலாம்.

ஞானத்தைத் தரும் இறைவன் பணத்தைத் தரமாட்டாரா என்ன?

அதைத்தான் இந்த வீடியோவில் உள்ள செய்தி சொல்கிறது!

ஆகவே நீங்களும் அந்தப் பாடலைப் பதம் பிரித்து “வருவாய் அருள்வாய் குகனே!” என்று தினமும் பிரார்த்தனை செய்ய்ங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து உங்கள் கஷ்டங்களைத் தீர்ப்பார் நம் குமரக் கடவுள்!!!!


-----------------------------------------
நட்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. Good morning sir very useful video for all, this video clears my long day doubt thanks for posting valuable video sir.vazhga valamudan sir

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Thanks for sharing this holy songs...

    Have a pleasant day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வாத்தியார் உம்ம மிச்ச ஆள் இல்லை

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,ஆஹா!சூப்பர்!இது முன்னாடியே தெரியாம போச்சே.நன்றி.

    ReplyDelete
  5. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful video for all, this video clears my long day doubt thanks for posting valuable video sir.vazhga valamudan sir////

    உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing this holy songs...
    Have a pleasant day.
    With regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  7. ////Blogger Kesavaraj & Kalaivani said...
    வாத்தியார் உம்ம மிச்ச ஆள் இல்லை/////

    நான் அப்படி நினைத்ததில்லை. நான் எளியவன். இறையருளால் எழுதுகிறேன். அவ்வளவுதான்!

    ReplyDelete
  8. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஆஹா!சூப்பர்!இது முன்னாடியே தெரியாம போச்சே.நன்றி./////

    அதனாலென்ன? இப்போது அரம்பித்து விடுங்கள் அதித்தன்!!!!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    nalladhu..////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com