6.7.17

என்னுடையது என்று உள்ளது எது?


என்னுடையது என்று உள்ளது எது?

வாழ்க்கைத் தத்துவம்!

 மரணம் :
வா  மனிதா . .நீ  கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.."

மனிதன்:
"இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

மரணம் :
"மன்னித்துவிடு மனிதா . உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."

மனிதன் :
நான்   இரவு , பகலாக  உழைத்து  சேர்த்த   எனது  பொருளாதாரம் . .

மரணம் :
"நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு ..

மனிதன் :
"என்னுடைய திறமைகள். .

மரணம் :
"அவை உன் சூழ்நிலைகளுடன் சம்மந்தப்பட்டது..

மனிதன் :
"அப்படி என்றால் என் மனைவி,மக்கள்  மற்றும்   உற்றார்  உறவினர் . .

மரணம் :
அவர்கள்   உன்   இதயத்துடன்  சம்பந்தப்பட்டவர்கள் . .

மனிதன்:
எனது  உடல்?

மரணம்:
"அது இந்த  மண்ணுக்கு   சொந்தமானது

மனிதன்:
(கண்களில்   நீர் வழிய -) "என்னுடையது என்று எதுவும் இல்லையா?"

மரணம்:
நீ வாழ்ந்த  ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..
நீ  செய்த  தர்மம் , பிறருக்கு  நன்மை  செய்தது  ,
பிறர்  துன்பத்தில்   பங்கு  கொண்டது  ,
பிறருக்கு  தீங்கு  செய்யாமல்  இருந்தது ,  
போன்ற  நல்ல  செயல்கள் , மற்றும்  நீ  செய்த
பாவ  கருமங்கள்..இவை  மட்டுமே  உன்னுடையது . .
மற்ற   எதையும்   இறுதிக் காலத்தில் நீ  உன்னுடன் கொண்டு போக முடியாது..

*வாழும்  காலம்  கொஞ்சமே......*மனிதா  நீ  மாறிவிடு ,உன்  மறு  உலகத்திற்காக...*

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. Good morning sir, very nice sir thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. Dear sir,
    Good morning and very nice advise to students so every day I must do at least one good thing to the society.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,எதுவும் என்னுடையதில்லை.எதையும் எடுத்து போவதுமில்லை,கர்ம வினையைத் தவிர என்பதை மனிதன் அந்திம காலத்தில்தான் உணருகிறான்.வாலிபத்தில் உணர்ந்தவர்களே ஞானிகள் ஆகிறார்கள்.நன்றி.

    ReplyDelete
  4. Simple, but best for every human. Thank u sir

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, very nice sir thanks sir vazhga valamudan sir////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. ////Blogger seenivasan said...
    Dear sir,
    Good morning and very nice advise to students so every day I must do at least one good thing to the society./////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,எதுவும் என்னுடையதில்லை.எதையும் எடுத்து போவதுமில்லை,கர்ம வினையைத் தவிர என்பதை மனிதன் அந்திம காலத்தில்தான் உணருகிறான்.வாலிபத்தில் உணர்ந்தவர்களே ஞானிகள் ஆகிறார்கள்.நன்றி./////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete
  8. ////Blogger t.nagoji rao said...
    Simple, but best for every human. Thank u sir////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. ///Blogger Kannan L R said...
    Super ayya ..
    Kannan/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com