1.5.17

குதிரையை விரட்டுங்கள் என்று எதற்காகச் சொன்னார் துறவி?


குதிரையை விரட்டுங்கள் என்று எதற்காகச் சொன்னார் துறவி?

குதிரையை விரட்டுங்கள்!!!!

துறவி சொன்ன அறிவுரை.......!!!

ஆன்மிக பூமி நம் நாடு. நம் நாட்டில் தான் ஞானிகள் அதிகம் உண்டானார்கள் ,வந்தார்கள் ,தங்கினார்கள் ,அடக்கம்
ஆனார்கள் என்று நமக்கு தெரிந்த விவரம் தான் .

இப்படி ஆன்மிக பயணம் நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கும் .

இந்த ஆன்மிக பயணம் ஏன்....???

ஒரு சின்ன கதை

துறவி  ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்.

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்.

இளைஞன் ஒருவன் வந்தான்

"சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன
பயன்......??? என்று கேட்டான்.

துறவி  அவனிடம் சொன்னார்......

தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ  கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் , அதற்கு முன் ஒரு வேலை செய். "ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை.
நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு" என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.

மறுநாள் காலை துறவி  அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.

அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு  குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் துறவி. இன்று சுத்தப் படுத்தினாலும் இந்த
இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து
விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்.......??? என்று கேட்டார்.

அதற்கு அவன்,    "என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கறீங்க.....??? திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு
சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா....???

இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்  "தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.

நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் , அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம்
செய்வது போல் , மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.

இளைஞன் கேட்டான்” சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன....???

அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார், பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக்  கேட்டார்

“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா......???

ஆகாது சாமி. என்றான்

துறவி  கூறினார் ” உன் கேள்விக்கு இதான் பதில்.

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற  குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,  அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும், அன்று வரை மனிதனை
நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்........!!!
------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. Very useful information sir thanks for your valuable words sir

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    சிறப்பான விளக்கம் நன்றி
    மூர்த்தி

    ReplyDelete
  3. நம்மை பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் காத்தருளட்டும்.

    ReplyDelete
  4. உண்மை. நன்னெறிப்படுத்துதலே ஆன்மீகத்தின் வேலை

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... Excellent postttttttt.....

    Thanks for sharing...

    Have a great day.

    Thanks & regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. super ஆனால் ஆசை என்னும் குதிரையை அவிழ்த்து விட நேரமும் இல்லை அதற்குண்டான சிந்தனையும் இல்லை இந்த கலியுகத்தில் வாழுகின்ற மனிதர்களுக்கு .... நித்யானந்தா, ஆதி யோகி போன்ற கலியுக ஆன்மிக வாதிகளுக்கும் ஆசை என்னும் குதிரையை அவிழ்த்துவிட எண்ணம் துளி கூட இல்லை.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,கதையும்,விளக்கமும் சிறப்பு.நன்றி

    ReplyDelete
  8. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Very useful information sir thanks for your valuable words sir////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!


    ReplyDelete
  9. ////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    சிறப்பான விளக்கம் நன்றி
    மூர்த்தி/////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மூர்த்தி கிருஷ்ணன்!!!

    ReplyDelete
  10. ////Blogger SELVARAJ said...
    நம்மை பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் காத்தருளட்டும்./////

    நம்பிக்கை வைப்போம். நிச்சயம் அவர் காத்தருள்வார். நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  11. ////Blogger ராஜி said...
    உண்மை. நன்னெறிப்படுத்துதலே ஆன்மீகத்தின் வேலை/////

    ஆமாம். நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  12. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Excellent postttttttt.....
    Thanks for sharing...
    Have a great day.
    Thanks & regards,
    Ravi-avn/////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!!

    ReplyDelete
  13. ////Blogger kmr.krishnan said...
    Very nice Sir.////


    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  14. ////Blogger C.Senthil said...
    super ஆனால் ஆசை என்னும் குதிரையை அவிழ்த்து விட நேரமும் இல்லை அதற்குண்டான சிந்தனையும் இல்லை இந்த கலியுகத்தில் வாழுகின்ற மனிதர்களுக்கு .... நித்யானந்தா, ஆதி யோகி போன்ற கலியுக ஆன்மிக வாதிகளுக்கும் ஆசை என்னும் குதிரையை அவிழ்த்துவிட எண்ணம் துளி கூட இல்லை.////

    உண்மைதான். கடைசிவரை பலரும் உணரமாட்டார்கள். நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  15. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கதையும்,விளக்கமும் சிறப்பு.நன்றி////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com