14.2.17

சனீஷ்வர பாதிப்பிற்கான பரிகாரம்!


சனீஷ்வர பாதிப்பிற்கான பரிகாரம்!

யாரும் சனியோட கடுமையால் கடுமையாக பாதிக்க படக் கூடாது என்பதற்காக சித்தர்கள் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்...

சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு, அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரை சுற்றிப் போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித் தூக்கி சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் ,அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதைச் செய்யவும்.

அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழை காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள்
எடுத்துக் கொள்ளும்.

இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இரண்டரை
ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய் விடும்.இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை
எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பேர்களுக்கு அன்னதானம் செய்ததற்குச் சமம்.

எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி,சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.
====================================================
படித்தேன்; பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. இவ்வளவு எளிய பரிஹாரங்கள் இருக்கும் போது ஏன் ஐயா சில ஜோதிடர்கள்
    ஆயிரம் ல‌ட்சத்தில் செலவு செய்ய வைக்கிறார்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,எளிய காரியம்.எல்லோரும் எளிதாக கடைபிடிக்கலாம்.நன்றி.

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    இவ்வளவு எளிய பரிஹாரங்கள் இருக்கும் போது ஏன் ஐயா சில ஜோதிடர்கள்
    ஆயிரம் ல‌ட்சத்தில் செலவு செய்ய வைக்கிறார்கள்./////

    நமது அறியாமைதான் காரணம். உங்களின் பின்னூட்ட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,எளிய காரியம்.எல்லோரும் எளிதாக கடைபிடிக்கலாம்.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete
  5. Ennai pondra eliyavarukku....
    sirantha parikaaram guruve....

    ReplyDelete
  6. மிக உதவிகரமான தகவல் ஐயா. நான் ரிசப ராசி. அஷ்டம சனியின் பாதிப்பினால் சென்ற வாரம் விபத்தில் சிக்கி கை முறிந்து சிரமப்பட்டு
    க் கொண்டு இருக்கின்றேன். தாங்கள் கூறிய பரிகாரத்தை செய்கிறேன் ஐயா.

    ச கார்த்திகேயன்,
    கரூர்.

    ReplyDelete
  7. Vanakkam iyya,

    Intha eliya parikaarathai naan indru seithen... Vanni mara adiyil irukum pillayarai vanangi seithen .... Mikka nandri iyya..

    Nandri,
    Bala

    ReplyDelete
  8. /////Blogger Vijay said...
    Ennai pondra eliyavarukku....
    sirantha parikaaram guruve..../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. //////Blogger Unknown said...
    மிக உதவிகரமான தகவல் ஐயா. நான் ரிசப ராசி. அஷ்டம சனியின் பாதிப்பினால் சென்ற வாரம் விபத்தில் சிக்கி கை முறிந்து சிரமப்பட்டு
    க் கொண்டு இருக்கின்றேன். தாங்கள் கூறிய பரிகாரத்தை செய்கிறேன் ஐயா.
    ச கார்த்திகேயன்,
    கரூர். /////

    அப்படியே, தினமும் விக்னேஷ்வர வழிபாட்டையும் செய்யுங்கள்!

    ReplyDelete
  10. /////Blogger bala said...
    Vanakkam iyya,
    Intha eliya parikaarathai naan indru seithen... Vanni mara adiyil irukum pillayarai vanangi seithen .... Mikka nandri iyya..
    Nandri,
    Bala/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல் நன்றி ஐயா......

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com