21.11.16

Humour: நகைச்சுவை: பணத் தட்டுப்பாட்டை மறந்துவிட்டு சிரித்து வைப்போம் வாங்க!

 
Humour: நகைச்சுவை: பணத் தட்டுப்பாட்டை மறந்துவிட்டு சிரித்து வைப்போம் வாங்க!
பதிவிட்டுள்ளவை எல்லாம் சிரிக்க மட்டுமே: வேறு விவகாரம் வேண்டாம்!
-----------------------------------------------------------------------
1
ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:

"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்:

"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
--------------------------------------------------
2
தாய் - ஜோசியரே, எவ்வளவு பரிகாரம் செய்தும், என் பையன் வெளிநாடு செல்வது தடைபட்டே வருதே..?

ஜோசியர் - பெயரை மோடின்னு மாத்திப் பாருங்களேன்..
--------------------------------------------------
3
 ( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)  

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"  

"வீட்லதான்டா இருக்கேன்..."  

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"  

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."
--------------------------------------------
4
அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு

மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
-------------------------------------------------------
5
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
------------------------------------------
6
“ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”

“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”
------------------------------------------------
7
 பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”

“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”

“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”
--------------------------------------------------
8
 முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…

முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
----------------------------------------------------
9
"என் ஒய்ஃபு என்னைய ₹2000/- நோட்டு மாதிரி பாத்துக்கறா..!"

"அவ்ளோ மரியாதையாவா?"

"ம்க்கும்... 'உங்கள மாத்தவும் முடில...தூக்கிப் போடவும் முடில'ன்னு திட்றாய்யா!"
----------------------------------------------------
10
மனைவி :- நான் ஷாப்பிங் போறேன், உங்களுக்கு எதாவது வேணுமா?

கணவன் :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும்

மனைவி_:- குவாட்டரா, ஆப்பா ரெண்டுல எதுவேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க...!!!
---------------------------------------------------------------
இந்தப் பத்தில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்

==========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. Respected Sir,

    Happy morning... 2 and 4 are excellent.

    Have great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,ஒன்று முதல் பத்துவரை எல்லாமே புதியவையாகவும் நல்ல நகைச்சுவையாகவும் இருந்தன.நன்றி.

    ReplyDelete
  3. அன்புள்ள குருவே!
    வணக்கம் 4,5 நகைச்சுவை நல்ல டாப் கிளாஸ்!

    ReplyDelete
  4. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... 2 and 4 are excellent.
    Have great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  5. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஒன்று முதல் பத்துவரை எல்லாமே புதியவையாகவும் நல்ல நகைச்சுவையாகவும் இருந்தன.நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    அன்புள்ள குருவே!
    வணக்கம் 4,5 நகைச்சுவை நல்ல டாப் கிளாஸ்!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. யாத்திரை.. அதனால் குழுவில் பதில் பதிய முடியவில்லை..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com