2.1.16

சினிமா: என்னவொரு கலக்கலான கற்பனை சாமி!


சினிமா: என்னவொரு கலக்கலான கற்பனை சாமி!
திரைப் படத்திற்காக எழுதப்பெற்ற பாடல் என்றாலும், என்னவொரு கலக்கலான கற்பனையுடன் கவிஞர் பாடலை எழுதியுள்ளார். வரிகளையும் படியுங்கள். பாடலின் காணொளியும் உள்ளது. அதையும் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?

தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?

கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்

சத்தியமாகவா?

நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?

நட்சத்திரங்களை தூசு தட்டி 
நான் நல்ல வீடு செய்வேன்

நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?

உருகிய துளிகளை ஒன்றாக்கி 
என் உயிர் தந்தே உயிர் தருவேன்

ஏ ராஜா இது மெய்தானா?

ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை

நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?

அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க

இந்த நீரிலே அன்பு செய்தால் 
என்னவாகுமோ என் பாடு?

காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு

பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்

ஏ ராணி அந்த இந்திரலோகத்தில் 
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்

உன் அன்பு அது போதும் 
(தொடு தொடு..)

படம்: துள்ளாத மனமும் துள்ளும்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
படம் வெளியான தேதி 29-1-1999
ஆக்கம்: கவிஞர் வைரமுத்து
======================================================

our sincere thanks to the person who uploaded this video in the net



=================================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

14 comments:

  1. கருத்து ஏதும் இல்லை

    ReplyDelete
  2. குருவே வந்தனம்.
    தங்கள் தேர்வல்லவா,பாடல்! ஜோராக உள்ளது. காணொளியில் streo effectல் இனிமையாக உள்ளது! பாடல் வரிகளை இவ்வளவு துல்லியமாக படம் பார்க்கும்போது கவனிக்கவில்லை என்பதும் புரிகிறது!?

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    Good song Sir.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. /////Blogger வேப்பிலை said...
    கருத்து ஏதும் இல்லை/////

    நல்லது. அதனாலென்ன பரவாயில்லை! நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  5. /////Blogger வரதராஜன் said...
    குருவே வந்தனம்.
    தங்கள் தேர்வல்லவா,பாடல்! ஜோராக உள்ளது. காணொளியில் streo effectல் இனிமையாக உள்ளது! பாடல் வரிகளை இவ்வளவு துல்லியமாக படம் பார்க்கும்போது கவனிக்கவில்லை என்பதும் புரிகிறது!?/////

    உங்களின் இரசனை உணர்விற்கு பாராட்டுக்கள் வரதராஜன். பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  6. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    vanakam./////

    உங்களின் வணக்கத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. Vanakkam ayya arumaiyana karpanai miguntha padal vazhaga valamudan

    ReplyDelete
  8. கவிஞரின் கற்பனை ஆபாரம்

    ReplyDelete
  9. /////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya arumaiyana karpanai miguntha padal vazhaga valamudan/////

    நல்லது. நன்றி கஜபதிஷா!

    ReplyDelete
  10. ////Blogger Elango Sellappan said...
    கவிஞரின் கற்பனை ஆபாரம்////

    நல்லது. நன்றி இளங்கோ செல்லப்பன்!

    ReplyDelete
  11. ////Blogger பரிவை சே.குமார் said...
    நல்ல பாடல் ஐயா..////

    நல்லது. நன்றி குமார்!.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com