3.12.15

சினிமா: என்னவொரு கற்பனை சாமி?


சினிமா: என்னவொரு கற்பனை சாமி?

சாதாரண சினிமா பாடல் என்று சொல்லிவிடுவோம். ஆனால் அதில் உள்ள வரிகள் அசத்தலாக இருக்கும்போதும், இசை தூக்கலாக இருக்கும்போதும் மனதை வருடிக் கொடுக்கும். அப்படிப் பட்ட பாடல் ஒன்றை உங்களுக்காக இன்று வலை ஏற்றியிருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

(குங்குமத்தையும், மல்லிகைப்பூவையும் கவிஞர் எங்கே தேடுகிறார் பாருங்கள்)

கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்

நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

செண்பகப் பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன

பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ
-------------------
படம்: பவித்ரா (1994)
வரிகள்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர் ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ. S.P.B.பல்லவி
நடிப்பு: ராதிகா, நாசர், அஜீத், கீர்த்தனா
------------------------------------------
Pavithra
1994 film
A young patient who is suffering from cancer is shown maternal love and affection by the nurse who tends to him. However trouble begins when her husband mistakes her affection for the patient to be something else.
Director: K. Subhash
Music director: A. R. Rahman
Awards: National Film Award for Best Male Playback Singer, National Film Award for Best Lyrics
----------------------------------------------------------

பாடகி  S.P.B.பல்லவி

பாடகர் மனோ



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

12 comments:

  1. கலை துறையை சேர்ந்தவன் என்பதால்
    கனிவான பாடலை காலையில் தந்தீரோ?

    அன்று இளையராஜாவை சொன்னதால்
    இன்று ரகுமானை சொல்ல வந்ததோ ?

    நன்று
    நலமுடன் வாழ்க

    ReplyDelete
  2. குரு வணக்கம்.
    பாடல் வரியின் தொடக்கமே ஆஹா!
    இரசிக்க வேண்டிய வரிகள்/ இசை/ குரல்கள்!
    நன்றி, ஐயா!

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    Yes. Good song.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. /////Blogger வேப்பிலை said...
    கலை துறையை சேர்ந்தவன் என்பதால்
    கனிவான பாடலை காலையில் தந்தீரோ?
    அன்று இளையராஜாவை சொன்னதால்
    இன்று ரகுமானை சொல்ல வந்ததோ ?
    நன்று
    நலமுடன் வாழ்க/////

    யார் கலைத் துறையைச் சேர்ந்தவர்?

    ReplyDelete
  5. /////Blogger siva kumar said...
    vanakkam iya////

    வணக்கம் சிவா!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    குரு வணக்கம்.
    பாடல் வரியின் தொடக்கமே ஆஹா!
    இரசிக்க வேண்டிய வரிகள்/ இசை/ குரல்கள்!
    நன்றி, ஐயா!///

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. மறக்க முடியாத பாடல் வரிகள் பர்வுக்கு நன்றி சகோ...
    Joshva

    ReplyDelete
  8. /////Blogger Joshva P.P said...
    மறக்க முடியாத பாடல் வரிகள் பர்வுக்கு நன்றி சகோ...
    Joshva/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. அருமையான பாடல். சுகமான இசை, இதமான வரிகள். பாடகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

    ReplyDelete
  10. /////Blogger thozhar pandian said...
    அருமையான பாடல். சுகமான இசை, இதமான வரிகள். பாடகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்./////

    தங்களின் இரசனை உணர்வு வாழ்க பாண்டியரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com