13.9.15

Half quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இருக்கும்போது, குழந்தை எப்படிப் பிறக்கும் ராசா?


Half quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இருக்கும்போது, குழந்தை எப்படிப் பிறக்கும் ராசா?

Quiz.94. பதில்

13.9.2014

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து அலசச் சொல்லியிருந்தேன். ஜாதகிக்குக் குழந்தையில்லை. ஜாதகப்படி என்ன காரணம் என்று கேட்டிருந்தேன். நிறையப் பேர்கள் ஆரவத்துடன் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் 
பதிலை எழுதியுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். 

நல்லபடியாகத் திருமணமாகியும் கருத்தரிக்க முடியாமல் சோகமாகிப் போனது அந்தப் பெண்ணின் வாழ்க்கை. ஜாதகப்படி அதற்கு என்ன
காரணம் என்று இன்று அலசுவோம்



1. கும்ப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சனி 9ல் உச்சம்.
2. ஏழாம் வீட்டில் ஆறாம் வீட்டுக்காரன் சந்திரன் வந்து அமர்ந்துள்ளான். வில்லன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன். அது நன்மையான அமைப்பு அல்ல
3. 2ஆம் வீட்டில் (குடும்பஸ்தானத்தில்) மாந்தி. அதுவும் நன்மையானதல்ல. குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்கள் உண்டாகும்
4. குழந்தை பாக்கிய ஸ்தானத்தில் ராகு.

முக்கியமான மேட்டர்:

7ஆம் வீடு பெண்களுக்குக் கருப்பைக்கான இடம். அங்கே ஆறாம்
வீட்டுக்காரன் வந்து அமர்ந்தது கருப்பைக் கோளாருக்கு வழி வகுக்கும். அத்துடன் 12ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயின் 8ஆம் பார்வை
(விஷேசப் பார்வை) சந்திரனின் மேல் விழுகிறது. செவ்வாயின்
பார்வையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிக்கொண்டே
இருந்தது. சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகி ஜாதகிக்கு கர்ப்பம் தரிக்க முடியாத
நிலையை ஏற்படுத்தியது.அதனால் ஜாதகிக்குக் குழந்தை இல்லை.

பதில் எழுதிய அனைவரும் பின்னூட்டட்த்தில் இருக்கும் தங்கள்  
பதிலுடன் இந்தப் பதிலையும், மற்றவர்களின் பதிலையும் 
ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7 comments:

  1. அருமையான அலசலுக்கு நன்றி ஐயா!

    இம்முறை 48 பேர் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் பார்க்காத கோணங்களில் பலர் சொல்லியுள்ளதைக் காணும் போது நம் புரிதல் மேலும் விரிவாகிறது. இந்த முறையில் புதிர், கற்றலுக்கு மிகவும் ஏற்றது.மிக்க நன்றி ஐயா!

    kmrk1949@gmail.com

    ReplyDelete
  2. ayya, ungal padhivugalaal, jodhidathil oralavu therchipetravan naan. Neengal, ungal classroom 2007 padhivugalil endha idathilum, pengalukku 7m idam karuppaikkaana idam endru, ungal padhivugalil kurippidavillai. Adhanaal, ungal maanavanaanaana enakku siru varutham. Oru velai, neengal ungal padhivugalil idhai kurippittirundhaal, thayai koorndhu suttikkaattavum. Nandrigal.

    TRM. Prakaash.

    ReplyDelete
  3. ////Blogger வேப்பிலை said...:)
    Did they thought of adapting a (female) child/////

    பதிவிற்கு அது முக்கியமா என்ன?

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    அருமையான அலசலுக்கு நன்றி ஐயா!
    இம்முறை 48 பேர் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் பார்க்காத கோணங்களில் பலர் சொல்லியுள்ளதைக் காணும் போது நம் புரிதல் மேலும் விரிவாகிறது. இந்த முறையில் புதிர், கற்றலுக்கு மிகவும் ஏற்றது.மிக்க நன்றி ஐயா!
    kmrk1949@gmail.com/////

    உங்களின் பரிந்துரைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. /////Blogger trmprakaash@gmail.com said...
    ayya, ungal padhivugalaal, jodhidathil oralavu therchipetravan naan. Neengal, ungal classroom 2007 padhivugalil endha idathilum, pengalukku 7m idam karuppaikkaana idam endru, ungal padhivugalil kurippidavillai. Adhanaal, ungal maanavanaanaana enakku siru varutham. Oru velai, neengal ungal padhivugalil idhai kurippittirundhaal, thayai koorndhu suttikkaattavum. Nandrigal.
    TRM. Prakaash.///

    விடுபட்டிருக்கலாம். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  6. I will publish this in healthcare oct 2015 issue sir

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com