4.8.15

முதல் வேலை எது?


முதல் வேலை எது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன.
படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
========================================================
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே
காலமும் துணையை நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுரமும்
மான்மகள் வள்ளி மறுபுரமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.

சூலமங்கலம் சகோதரிகள் - முருகா உனக்கு புகழ் மாலை
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. Sir, Please consider my mail which is in your mail box.

    Thanks,
    Ramesh.G (rameshgsamy@gmail.com)

    ReplyDelete
  2. ////Blogger Visu Iyer said...
    Muruga
    Muruga../////

    உருவாய் அருவாய் கருவாய் கதிராய்
    வருவாய் அருள்வாய் குகனே!

    ReplyDelete
  3. /////Blogger RameshG Samy said...
    Sir, Please consider my mail which is in your mail box.
    Thanks,
    Ramesh.G (rameshgsamy@gmail.com)//////

    பார்த்துப் பதில் அனுப்புகிறேன் நண்பரே!

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    Nice song/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com