28.7.15

எது நடக்காது?


எது நடக்காது?

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிப் பரவசப் படுத்திய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------
பழநிக்குச் சென்று ... அழகனைப் பார்த்து
உருகிய மேனி உலகிலே
தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?

தணிகைக்கு வந்து ... தலைவனைக் கண்டு
வணங்கியப் பின்னால் வாழ்விலே 
அன்பில் ... கும்பிட்ட கைகள் விலகுமா?
பொன் கோடி தந்தாலும் தீண்டுமா?
(பழநிக்குச் சென்று ... )

அறுபடை வீடும் ... அடியவரோடு
நடந்திடும் கால்கள் புவியிலே 
இனி ... வேரொருப் பாதையில் செல்லுமா?
வடிவேலவன் உறவைத் தள்ளுமா?
(பழநிக்குச் சென்று ... )

காவடிக் கொள்ளும் ... பூவடி நிழலில்
கலந்தப்பின் உள்ளம் கனவிலும் 
நாம் ... வாவென அழைத்தால் திரும்புமா?
அது வானுலகாயினும் விரும்புமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
 --------------பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் 
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com