21.7.15

பழம் உதிர்த்த சோலை அது!


பழம் உதிர்த்த சோலை அது!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------
பழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா
பட்டுக்குறத்தி வள்ளி மணவாளா 
பருவம் சிறியதாக இருந்தாலும்
ப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பக்தியோடு நீரணிந்து வருவோரை எல்லாம்
பற்றோடு காப்பவனே வேல் முருகா 
பச்சை மயிலேறி உலகைச் சுற்றி வலம் வந்த வேல் முருகா 
பாதத்தைப் பற்றி உன் கோயிலைச் சுற்றியே வந்தேன் வேல் முருகா 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பாடும் குயிலினங்களும் ஆடும் மயில் இனங்களும்
பாடிடும் குகா குகா என்றே வேல் முருகா 
பறக்கும் பறவையெல்லாம் உன் பெயர் சொன்னால் வேல் முருகா 
நான் ... பாடிடவும் வேண்டாமா
நாளும் கொண்டாடிட வேண்டாமா? 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா
பட்டுக்குறத்தி வள்ளி மணவாளா
பருவம் சிறியதாக இருந்தாலும்
ப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 
- பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. ////Blogger kmr.krishnan said...
    Nice song. Thank you Sir!//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  2. /////Blogger பரிவை சே.குமார் said...
    அருமை ஐயா...///////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com