14.7.15

அவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன?


அவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன?

பக்தி மலர்

14.7.2015

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
அருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு
ஒரு பயமும் உலகிலில்லை மனமே 
சிவ குமரனையே வணங்கிடுனே தினமே
குமரனையே வணங்கிடுனே தினமே

அரு மறையின் ஒரு பொருளை அறுமுகத்தின் திருவருளை
பெறுபவர்க்கு பிணிகள் இல்லை நினைவாய் 
அந்தப் பேரின்பச் சோலையிலே நுழைவாய் 

(அருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு
ஒரு பயமும் உலகிலில்லை மனமே
குமரனையே வணங்கிடுனே தினமே)

வளரெழிலும் மலர் மணமும் ... வழிநெடுக தேன்சுவையும் 
விருந்தாக நிறைந்து மனம் இனிக்கும்
வடிவேலுடனே மயிலும் வந்து அழைக்கும்
(அருணகிரி ... )

புதிய மனம் புதிய சுவை ... புதிய நிலை புதிய வழி 
தெறிந்தவர்க்கு திகைப்பேது பின்னே
இங்கு எதுவந்து எதுபோயின் என்னே 
(அருணகிரி ... )

அழகுவிழி பழகியபின் அமுத மழை பொழியும் அதில்
நனைந்தவர்க்கு வாய்த்ததுவே தருணம் 
குருநாதனவன் தாள் சரணம் சரணம்
(அருணகிரி ... )

குமரனையே வணங்கிடு தினமே

பாடிப்பரவசப் படுத்தியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் 
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. முருகா முருகா சரணம்

    ReplyDelete
  2. நல்ல பாடலை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  3. ////Blogger SELVARAJ said...
    முருகா முருகா சரணம்////

    ஓம் சரவணா சரணம்
    ஓம் சக்திவேலா சரணம்!

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    நல்ல பாடலை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ஐயா!///

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. ////Blogger Visu Iyer said...
    முருகா
    முருகா////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  6. ////Blogger பரிவை சே.குமார் said...
    முருகா... ஞானபண்டிதா...////

    ஆமாம் தன் பக்தர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும் பண்டிதன் அவன்!
    நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com