30.6.15

நண்பனாக வந்தவன் அவன்!


நண்பனாக வந்தவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
ஆயிரம் போற்றி பாடினும் ஆவல் ஆறுமோ முருகா
(ஆயிரம் ... )
ஆறுமுகா ...
(ஆயிரம் ... )

தாயினும் இனித்தாய் தந்தையாய் வளர்த்தாய் 
வாழ்வெல்லாம் வகுத்தாய் வரம் எனக்களித்தாய் 
(ஆயிரம் ... )

நீயே எளியேன் நெஞ்சினில் நின்றாய்
நிம்மதி தந்தே அஞ்சேல் என்றாய் 

நாயேன் பிழைகள் நாளும் பொருத்தாய் 
நண்பனாய் வந்தே துன்பம் தவிர்த்தாய் 
(ஆயிரம் ... )
ஆறுமுகா
(ஆயிரம் ... ).

பாடியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் 
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

  1. ///Blogger Visu Iyer said...
    முருகா
    முருகா////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com