2.6.15

சக்தி வேல் அது சண்முகன் கைவேல்!


சக்தி வேல் அது சண்முகன் கைவேல்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பெங்களூர் ரமணியம்மாள் அவர்கள் பாடிய முருகப்பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------
உள்ளத்திலே கோயில் கட்டி ... உன்னை அங்கு குடிவைத்தேன்
  எண்ணத்திலே தொட்டில் கட்டி ... என்னரசே தாலாட்டினேன்
(உள்ளத்திலே)

கள்ளமில்லாத பிள்ளையப்பா ... கருணையுள்ள தெய்வமப்பா 
 வாழ்வுதரும் கந்தப்பா ... வந்தருள்வாய் வேலப்பா 
(உள்ளத்திலே)

உன் புகழைப் பாடி வந்தேன் ... உனதருளை நாடி நின்றேன் 
  ஓம்கார குருவே வா வா ... உயர் ஞான குருவே வா வா 
(உள்ளத்திலே)

தத்திமி தோம் என்று ஆடிவரும் வீரவேல்
 தத்திமித்தோம் என்று ஆடிவரும் வீரவேல்

தஞ்சமென்றோர்க்கருள் தருமமிகு சக்திவேல்
தகதகிட தகதகிட என்றாடும் வெற்றிவேல் 
தயவுடன் அன்பர்க்கு அருள்தரும் ஞானவேல் 
தச்சதம் தகிடஜம் என்றாடும் வைரவேல் 
தத்துவப் புகழ்பாடும் ஷண்முகன் கைவேல் 

வெற்றிவேல் ... வீரவேல் ... சக்திவேல் ... ஷண்முகன் கைவேல்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. வணக்கம் வாத்தியார் ஐயா!

    நன்றி! வணக்கம்.

    ReplyDelete
  2. அருமையான பாடல் ஐயா!

    ReplyDelete
  3. செவ்வாயின் அதிபதியை அதே நாளில் வணங்க வழி வகுத்ததற்கு நண்றி.

    ReplyDelete
  4. உன் புகழை பாடி வந்தேன் ..
    உனது அருளை நாடி நின்றேன் ....

    அங்காரக கடவுள் முருகன்
    அங்காரக தோஷத்தை நீக்குபவன் ...
    அங்காரக நாள் செவ்வாய்

    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:

    ReplyDelete
  5. ////Blogger வேப்பிலை said...
    முருகா
    முருகா/////

    உருவாய்
    அருவாய்
    வருவாய் குகனே
    அருள்வாய் குகனே!

    ReplyDelete
  6. /////Blogger kannan Seetha Raman said...
    வணக்கம் வாத்தியார் ஐயா!
    நன்றி! வணக்கம்.////

    நல்லது. சீதாராமகண்ணன்

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    அருமையான பாடல் ஐயா!////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger SELVARAJ said...
    செவ்வாயின் அதிபதியை அதே நாளில் வணங்க வழி வகுத்ததற்கு நன்றி.////////

    முருகப்பெருமானை வணங்குவதற்கு கட்டுப்பாடுகள் ஒன்றுமில்லை. எப்போது வேண்டுமென்றாலும் வணங்கலாம்!

    ReplyDelete
  9. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    உன் புகழை பாடி வந்தேன் ..
    உனது அருளை நாடி நின்றேன் ....
    அங்காரக கடவுள் முருகன்
    அங்காரக தோஷத்தை நீக்குபவன் ...
    அங்காரக நாள் செவ்வாய்
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம://////

    கந்தா போற்றி
    கடம்பா போற்றி
    கதிர்வேலா போற்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com