15.5.15

வருபவை எல்லாம் அவன் விரும்பி தருபவை தானே!


வருபவை எல்லாம் அவன் விரும்பி தருபவை தானே!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன்  அவர்கள் பாடிய பாடல் ஒன்று நிறைவு செய்கிறது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=====================================================
எனக்கென்ன முருகா ... வருவது வரட்டும்
எல்லாம் உந்தன் மனம்போலே
இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே
(எனக்கென்ன முருகா ... )

நடக்கட்டும் குமரா ... உன் புகழ் இசைத்தால்
நான்கு திசைகளில் வரவேற்பு 
என்னை படைத்தவன் உன்னை ... மீண்டும் மீண்டும்
பாடுவதொன்றே என் பிழைப்பு 
(எனக்கென்ன முருகா ... )

ஆகட்டும் அழகா ... எங்கே போவாய்
என்முன் ஒருநாள் வாராமல் 
நான் அதுநாள் வரையில் ... எது நேர்ந்தாலும்
அன்பை வளர்ப்பேன் மாறாமல் 
(எனக்கென்ன முருகா ... )

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே.
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் ஆசானே.

    அவனை வணங்க மனம் இல்லை . ஆனாலும் வணங்காமல் இருக்கவும் முடியவில்லை.

    எல்லாம் அவன் செயல் .

    நன்றி ஆசானே .

    ReplyDelete
  2. அருமையான பாடல் ஐயா!

    ReplyDelete
  3. உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

    ReplyDelete
  4. ////Blogger kannan Seetha Raman said...
    வணக்கம் ஆசானே.
    அவனை வணங்க மனம் இல்லை . ஆனாலும் வணங்காமல் இருக்கவும் முடியவில்லை.
    எல்லாம் அவன் செயல் .
    நன்றி ஆசானே ./////

    எல்லாம் அவன் செயல்தான். கவலை எதற்கு?

    ReplyDelete
  5. /////Blogger Sabareesh Muralidharan said...
    very good ayya muruganin thirupugazhai paada en tha oru piravi pothumendral athu thavaragum OM SARAVANABHAVA !!
    Eppadikku anbulla manavan (NEW)
    M.SABAREESH//////

    உண்மைதான் நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    அருமையான பாடல் ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  7. /////Blogger senapathi siva said...
    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!/////

    அருள்வான். அருணகிரியாருக்கு அருளியதைப்போல நமக்கும் அருள்வான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com