25.4.15

கோயிலுக்குள் சென்றபோது கண்டது என்ன?

கோயிலுக்குள் சென்றபோது கண்டது என்ன?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ”வேல் வந்து வினை தீர்க்க ...” என்னும் முருகப்பெருமானின் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=================================
வேல் வந்து வினை தீர்க்க ... 
மயில் வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி ... 
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல் வந்து ... )

பால் கொண்டு நீராட்டிப் 
பழம் தந்து பாராட்டி 
பூமாலை போட்டேனடி ...
பூமாலை போட்டேனடி ... 
திருப்புகழ் மாலை கேட்டேனடி 
(வேல் வந்து ... )

பங்குனியில் உத்திரத்தில் ... 
பழநி மலை உச்சியினில் 
கந்தன் என்னைக் கண்டானடி ...
கந்தன் என்னைக் கண்டானடி ... 
எந்தன் சிந்தையில் நின்றானடி 

வேலழகும் மயிலழகும் ... 
வீற்றிருக்கும் பேரழகும் 
காலமெல்லாம் இருக்குமடி ... அந்த 
காட்சி என்றும் இனிக்குமடி 
(வேல் வந்து ... ).

சூலமங்கலம் சகோதரிகள் பாடியது!
=================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. Ayya
    Jothida Ayyuvugal Normba Nalagividdadhu.

    ReplyDelete
  2. /////Blogger kmr.krishnan said...
    Nice song. Thank you Sir/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  3. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    கந்தா...
    கடம்பா....
    கதிர்வேலா....
    கார்த்திகேயா....!

    ReplyDelete
  4. /////Blogger kannan Seetha Raman said...
    Yes Sir./////

    யெஸ் கண்ணன்!

    ReplyDelete
  5. /////Blogger slmsanuma said...
    Ayya
    Jothida Ayyuvugal Rormba Nalagividdadhu.//////

    இன்றையப் (27.4.2015) பதிவைப் பாருங்கள். உங்களுக்காகத்தான் அது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com