20.2.15

தேடி வந்தோர் இல்லம் எல்லாம் செழிக்கும் இடம்!



தேடி வந்தோர் இல்லம் எல்லாம் செழிக்கும் இடம்! 

 பக்தி மலர்

 இன்றைய பக்தி மலரை மதுரை எஸ்.சோமு அவர்கள் பாடிப் பரவசப் படுத்திய மருதமலை மாமணியே என்ற பாடல் நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

 அன்புடன் 
வாத்தியார் 
-----------------------------------------------
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா!

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கல மந்திரமே!
(மருதமலை)

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா!
(மருதமலை)

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டு வேன்..ஆ..
(மருதமலை)

சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் - நான் வருவேன்

பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
காண்பதெல்லாம் - உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் - எனதுமனம் உறு முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா....

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம்காக்கும் வேலய்யா அய்யா
---------------------
திரைப்படம்: தெய்வம்
பாடியவர் : மதுரை சோமு 
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன்



Our sincere thanks to the person who uploaded the song in the net

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=============================================

8 comments:

  1. அருமையான பாடல். நாத‌ஸ்வரம் போன்ற குரல் மதுரை சோமு ஐயாவுக்கு.

    'தேவரின் குலம் காக்கும்'என்பதில் இரண்டு பொருள். வானுல‌கத் தேவரையும் குறிக்கும்.சாண்டோ சின்னப்பத் தேவரையும் குறிக்கும்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    இனிமையான வரிகள் ஐயா

    ReplyDelete
  3. மருதமலை மாமணியே முருகையா அருமையான பாடல் ஐயா...

    ReplyDelete
  4. //////Blogger kmr.krishnan said...
    அருமையான பாடல். நாத‌ஸ்வரம் போன்ற குரல் மதுரை சோமு ஐயாவுக்கு.
    'தேவரின் குலம் காக்கும்'என்பதில் இரண்டு பொருள். வானுல‌கத் தேவரையும் குறிக்கும்.சாண்டோ சின்னப்பத் தேவரையும் குறிக்கும்.//////

    உண்மைதான். கவியரசர் கண்ணதாசன் இரண்டு பொருள் வருமாறுதான் அந்த வரியை எழுதினார். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. //////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    கந்தா
    கடம்பா
    கார்த்திகேயா
    கதிர்வேலா!

    ReplyDelete
  6. /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    இனிமையான வரிகள் ஐயா////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger பரிவை சே.குமார் said...
    மருதமலை மாமணியே முருகையா அருமையான பாடல் ஐயா...////

    ஆமாம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com