25.12.14

மனித ஆற்றலால் அறிய முடியாதது எது?


மனித ஆற்றலால் அறிய முடியாதது எது?

சில விஷயங்கள் மனித ஆற்றலுக்கு மேலானது. மனித ஆற்றலால் அறிய முடியாதது, அதை நாம் இறை சக்தி அல்லது இறையருள்  என்கிறோம்.

ஆங்கிலத்தில் ஒரே ஒரு சொல்தான் GOD - அத்துடன் முடிந்து விடும்.
தமிழில் பல சொற்கள் உள்ளன. இறைவன், ஆண்டவன், கடவுள், தெய்வம் என்ற சொற்கள் உள்ளன. எல்லாம் இறைவனையே குறிப்பதாகும். உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அச்சொற்களுக்கான பொருளை அகராதியில் இருந்து எடுத்துக் கீழே கொடுத்துள்ளேன்.

1. இறை (இறைவன்): கடவுள் -GOD

2. ஆண்டவன்: இறைவன் (Male God) உதாரணம். பழனியாண்டவர்

3. கடவுள்: உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படும், மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி - GOD

4. தெய்வம்: கடவுள், இறைவன் (God, Deity)
------------------------------------------------
இறையருள் இருந்தால் என்ன நடக்கும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டும் காணொளி ஒன்றை உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்.
அத்துடன் வாழ்க்கை என்பது என்ன என்பதை அற்புதமாக விளக்கும் அன்பர் ஒருவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றின் காணொளியையும் கொடுத்துள்ளேன்.பார்த்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==============================================================
1.God is Great

2 What is Life?

Our sincere thanks to the persons who uploaded these videos 
in the net
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. what is life!!!

    மிக அருமையான பகிர்வு வாத்தியாரே!!!

    மிக்க நன்றி...


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  2. இவர் பாவம்..
    இன்னமும் தனக்காக வாழவில்லை

    உடலுக்காக வாழும் இவர்
    உயிருக்காக வாழ்வது எப்போது

    அறிவாளி
    புத்திசாலி

    இந்த வேறுபாட்டை புரிந்தவருக்கு
    இது தெரியும்

    இவர் அறிவாளியா
    இல்லை புத்திசாலியா

    சொல்லுங்கள் பார்க்கலாம்

    ReplyDelete
  3. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    what is life!!!
    மிக அருமையான பகிர்வு வாத்தியாரே!!!
    மிக்க நன்றி...
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. ////Blogger வேப்பிலை said...
    இவர் பாவம்..
    இன்னமும் தனக்காக வாழவில்லை
    உடலுக்காக வாழும் இவர்
    உயிருக்காக வாழ்வது எப்போது
    அறிவாளி
    புத்திசாலி
    இந்த வேறுபாட்டை புரிந்தவருக்கு
    இது தெரியும்
    இவர் அறிவாளியா
    இல்லை புத்திசாலியா
    சொல்லுங்கள் பார்க்கலாம்/////

    அவர் நல்ல மனிதர். தன் மனைவி மக்களை மதிப்பதோடு, எளிமையாக வாழ்ந்தால் போதும் என்று நகர வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு சொந்த ஊருக்கே சென்ற நல்ல மனிதர். அது போதும். இன்றையத் தேவை நல்ல மனிதர்கள்தான். புத்திசாலிகள் அல்ல! அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  5. ///Blogger sundari said...
    Good evening sir.////

    உங்களின் மாலை வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. ////Blogger -'பரிவை' சே.குமார் said...
    நல்ல பகிர்வு அருமை.../////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ///Subbiah Veerappan said...
    அவர் நல்ல மனிதர். தன் மனைவி மக்களை மதிப்பதோடு, எளிமையாக வாழ்ந்தால் போதும் என்று நகர வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு சொந்த ஊருக்கே சென்ற நல்ல மனிதர். அது போதும். இன்றையத் தேவை நல்ல மனிதர்கள்தான். புத்திசாலிகள் அல்ல! ///

    எளிமை என்று
    எதை சொல்கின்றீர்கள்

    நல்ல என்றால்
    நல்லா யோசிச்சு சொல்லுங்கள்

    அதனால் தான்
    அறிவாளிக்கும்

    புத்திசாலிக்கும் வித்தியாசம்
    புரிந்து கொள்ள சொன்னது

    நகர வாழ்க்கை சிலருக்கு
    நரகம் மற்றவருக்கோ

    நரகமே மீளாத
    சொர்க்கம்

    சொந்த ஊர் அவருக்கு
    பந்தம் சொல்வதால் உங்களுக்கும்

    ஒவ்வொருவர் கருத்து
    ஒரு மாதிரியாக இருக்கும்

    உயிருக்காக வாழ வேண்டும்
    உடலுக்காக வாழ்வது வாழ்வல்ல

    ஆனால் உண்மை இது தான்
    அதனால் தான் அதனை சொன்னது

    ReplyDelete
  8. ///Blogger வேப்பிலை said...
    ///Subbiah Veerappan said...
    அவர் நல்ல மனிதர். தன் மனைவி மக்களை மதிப்பதோடு, எளிமையாக வாழ்ந்தால் போதும் என்று நகர வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு சொந்த ஊருக்கே சென்ற நல்ல மனிதர். அது போதும். இன்றையத் தேவை நல்ல மனிதர்கள்தான். புத்திசாலிகள் அல்ல! ///
    எளிமை என்று
    எதை சொல்கின்றீர்கள்
    நல்ல என்றால்
    நல்லா யோசிச்சு சொல்லுங்கள்
    அதனால் தான்
    அறிவாளிக்கும்
    புத்திசாலிக்கும் வித்தியாசம்
    புரிந்து கொள்ள சொன்னது
    நகர வாழ்க்கை சிலருக்கு
    நரகம் மற்றவருக்கோ
    நரகமே மீளாத
    சொர்க்கம்
    சொந்த ஊர் அவருக்கு
    பந்தம் சொல்வதால் உங்களுக்கும்
    ஒவ்வொருவர் கருத்து
    ஒரு மாதிரியாக இருக்கும்
    உயிருக்காக வாழ வேண்டும்
    உடலுக்காக வாழ்வது வாழ்வல்ல
    ஆனால் உண்மை இது தான்
    அதனால் தான் அதனை சொன்னது/////

    அன்பு, பாசம், நிறைந்தது குடும்ப உறவுகள். குடும்பத்திற்காகவும் வாழ்வது எப்படி உடலுக்காக வாழ்வதாகும்? நீங்களே சொல்லுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com