7.11.14

பயிர் வளர்க்கும் மழைபோல் வந்தவன் அவன்!


சென்னிமலை முருகன்

பயிர் வளர்க்கும் மழைபோல் வந்தவன் அவன்!

பக்திப்பாடல்

இன்றைய பக்திப் பாடல் மலரை பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய   -  'உயிர் கொடுத்த நாள் முதலாய்'’ என்னும் முருகப்பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன! அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------
உயிர் கொடுத்த நாள் முதலாய் ... 
நினைவை ஊட்டினை 
என் உடல் படைத்த நாள் முதலாய் ... 
வணங்க வைத்தனை 

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... 
நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... 
வணங்க வைத்தனை

பயிர் வளர்க்கும் மழையது போல் ... 
அருளவந்தனை
நான் பட்ட துன்பம் எட்ட ஓட ... 
பார்வை தந்தனை 

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

பழநி மலையில் வீற்றிருக்கும் ... 
தண்டபாணியே
ஞானப் பழமாக இனித்திருக்கும் ... 
அழகு தெய்வமே 

மழலையாக தவழ்ந்து வந்த ... 
குழந்தை வேலனே 
என் மனத்திலென்றும் நிலைத்து நின்ற ... 
சுவாமிநாதனே 

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

காட்டுகின்றக் காட்சியெல்லாம் ... 
கண்டுகொள்கிறேன்
உன் கருணை ஒன்றை நம்பியன்றோ ... 
காத்திருக்கிறேன் 

ஆட்டுகின்றக் கோலை நோக்கி ... 
ஆடிவருகிறேன்  - உன் 
அன்பு என்னும் கோயில் நோக்கி ... 
ஓடி வருகிறேன் 

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... 
நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... 
வணங்க வைத்தனை

முருகா ... முருகா ... முருகா ... முருகா ... .
---------------------------------
பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் 

வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

4 comments:

  1. வணக்கம் சார்.......
    முருகா, முருகா...
    வரம் வேண்டும்!
    அருள் வேண்டும்!
    ********************

    ReplyDelete
  2. சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. முருகா... முருகா...
    நல்ல பகிர்வு ஐயா...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com