8.8.14

முன் வினைகள் எப்போது தீரும்?

 
முன் வினைகள் எப்போது தீரும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமானின் புகழ் பரப்பும் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன! அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

=======================================================
தென் பழநி மலையோரம்
தெள்ளு தமிழ் இசை பாடும்
(தென் பழநி ... )

செந்தூரின் கடலோரம்
வேலோடு மயிலாடும்
(தென் பழநி ... )

முருகா ... முருகா ...

தணிகைமலை உச்சியிலே
சேவல் எனும் கொடியாடும்
திருப்பரங்குன்றத்திலே
தேவா உன் தேரோடும்
(தென் பழநி ... )

காவிரியில் நீராடி
சுவாமிமலை படியேறி
முருகா உன் முகங்காண
முன் வினையும் தீர்ந்துவிடும்

பழமுதிரும் சோலையிலே
பழமாய் நீ கனிந்திருக்க
பார்த்தவர்க்கு பசிதீரும்
பணிந்தவர்க்கு புகழ் சேரும்
(தென் பழநி ... )

செந்தூரின் கடலோரம்
வேலோடு மயிலாடும்
முருகா ... முருகா ...
முருகா ... முருகா ... முருகா ...
முருகா ... முருகா ... முருகா ... .

===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. அருமையான பாடலைச் சுட்டியதற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. இந்த வார பக்தி மலர் பாடல் அருமை! சீர்காழியின் குரலில் இன்னும் இனிமை.

    நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா
    சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா (நீல)

    வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே எழில்
    வேழ முகம் படைத்தோன் சோதரனே
    வேல் விழி குறமாதின் மணாளனே என்
    சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே (நீல)
    பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:

    ReplyDelete
  4. Sir In your 2011 article about rahu ,you said rahu in lagna will give bad results! But for a little clarification, if the lagna was vrichika then will he be beneficial or not?

    ReplyDelete
  5. //////Blogger kmr.krishnan said...
    அருமையான பாடலைச் சுட்டியதற்கு நன்றி ஐயா!////

    உண்மைதான். சீர்காழி அவர்கள் பாடிய முருகன் பாடல்கள் அனைத்துமே அருமையானவைதான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  7. ///Blogger venkatesh r said...
    இந்த வார பக்தி மலர் பாடல் அருமை! சீர்காழியின் குரலில் இன்னும் இனிமை.
    நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா
    சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா (நீல)
    வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே எழில்
    வேழ முகம் படைத்தோன் சோதரனே
    வேல் விழி குறமாதின் மணாளனே என்
    சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே (நீல)
    பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:////

    முருகப்பெருமானை வணங்குதற்கு உரிய மந்திரத்தைக் குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com