22.8.14

எதை எதை அவன் கொடுத்தான்!


எதை எதை அவன் கொடுத்தான்!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகன் பாடலொன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------
ஞானம் கொடுத்தான் ... மிக நல்லதெல்லாம் கொடுத்தான்
ஞானம் கொடுத்தான் ... மிக நல்லதெல்லாம் கொடுத்தான்
கானம் தொடுக்க எந்தன் ... கவிதைக்கு உயிர் கொடுத்தான் 

குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
ஆவினன்குடியில் வீற்றிருக்கும் அழகனவன் 
(ஞானம் கொடுத்தான் ... )

பானம் கொடுத்தான் ... அதில் பாலொடுதேன் மடுத்தான்
அமுத ... பானம் கொடுத்தான் ... அதில் பாலொடுதேன் மடுத்தான்
பஞ்சாமிருதம் கொடுத்தான் ... நெஞ்சாரவே நிலைத்தான் 

குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
பேரன்பு வடிவாக வந்த அமரனவன்
(ஞானம் கொடுத்தான் ... )

மோனம் கொடுத்தான் ... என்னை முற்றும் நான் உணர
முன்னே வேல் விடுத்தான் ... பின்னே மயில் தொடர
ஆனமட்டும் எனக்கு ... அறிவுறைகள் கொடுத்தான் - குமரன்
ஆனமட்டும் எனக்கு ... அறிவுறைகள் கொடுத்தான்
ஆறெழுத்தை ஓதி ... ஆறுதலைக் கொடுத்தான் 

குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
என்னை சந்ததமும் காத்து நிற்கும் கந்தன் குகன் 
(ஞானம் கொடுத்தான் ... )

கானம் தொடுக்க ... எந்தன் கவிதைக்கு உயிர் கொடுத்தான்
(ஞானம் கொடுத்தான் ... ).

பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்.
------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

8 comments:

  1. ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:

    ReplyDelete
  2. Murugane senthil murugane mayon marumane easan magane oru kai mugan thambi un thandai kal patri kai tholuven naan

    ReplyDelete
  3. நல்ல பாடல் பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  4. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம://////

    ஆமாம். முருகப்பெருமானின் பக்தர்களுக்கான மந்திரம் இது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. //////Blogger Regunathan Srinivasan said...
    Murugane senthil murugane mayon marumane easan magane oru kai mugan thambi un thandai kal patri kai tholuven naan////

    முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
    மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
    தம்பியே உன் தண்டைக்கால் எப்போதும்
    நம்பியே கைதொழுவேன் நான்!
    - நக்கீரர் எழுதிய திருமுறுகாற்றுப்படை பாடல்களில் ஒன்று. வெண்பா இலக்கணத்திற்கு நல்ல சான்றாகத் திகழும் பாடல் இது!

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  7. //////Blogger சே. குமார் said...
    நல்ல பாடல் பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா...////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com