4.7.14

இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?

 

இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி? 

பக்தி மலர்!

இன்றைய பக்தி மலரை, திருமதி. M.L. வசந்தகுமாரி அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

--------------------------------------------------------
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
  கந்தன் வரக் காணணே
... மயிலே ...
(அந்தி மயங்குதடி)

வண்ண மயிலே ... வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்துவிட்ட ... தோக்கமில்லா துன்பத்தை
  கொத்தி எடுத்திடவே ... மயிலே ...
  கொத்தி எடுத்திடவே ... உதடவரைத் தேடுதடி
(அந்தி மயங்குதடி)

வண்ண மயிலே ... வண்ண மயிலே
  தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி
  இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?

கள்ளச் சிரிப்பாலே கண்ணத்தைக் கிள்ளிவிட்டு
  அள்ளி அணைத்திடவே ... மயிலே ...
  அள்ளி அணைத்திடவே ... அவர் வரக் காணணே
(அந்தி மயங்குதடி)

வண்ண மயிலே ... வண்ண மயிலே

----------------------------
பாடலைப் பாடியவர்: திருமதி M.L. வசந்தகுமாரி
பாடலாக்கம்:  விந்தன்
இசை:  வேதா
படம் - பார்த்திபன் கனவு (1960)

----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

  1. அருமையான பாடல் வரிகள்.

    ReplyDelete
  2. அய்யா வணக்கம் சவுக்கியமா

    ReplyDelete
  3. சிறந்த பாடல் பகிர்வு

    ReplyDelete
  4. ஐயா,

    தங்களை தொந்தரவு செய்வதர்க்கு மன்னிக்கவும்....

    ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன், இது ஆண் ஜாதகமா (அ) பெண் ஜாதகமா என்று கண்டறிய இயலுமா?......

    அதுபோல

    பிறந்த நேரம் ,கிழமை, அன்றைய சூரிய உதயம் இவற்றை கொண்டு பிறந்திருப்பது ஆணா (அ) பெண்ணா என்று கூற இயலுமா?.....


    அறிவியலுக்கு அப்பாற்பட்ட மாபெரும் இச் ஜோதிடத்தை நமக்கு தந்தருளிய நம் முன்னோர்களுக்கு நன்றி.................

    ReplyDelete
  5. ////Blogger சே. குமார் said...
    அருமையான பாடல் வரிகள்./////

    அப்பனைப் பற்றி எதை எழுதினாலும் அது அருமையாகத்தான் அமையும். நன்றி!

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    கந்தா...
    கடம்பா....
    கதிர்வேலா....
    கார்த்திகேயா....
    வருவாய் அருள்வாய்!

    ReplyDelete
  7. ////Blogger raju maharajun said...
    அய்யா வணக்கம் சவுக்கியமா/////

    பழநி அப்பன் அருளால் நலமாக உள்ளேன் நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த பாடல் பகிர்வு/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. //////Blogger ramesh kumar said...
    ஐயா,
    தங்களை தொந்தரவு செய்வதர்க்கு மன்னிக்கவும்....
    ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன், இது ஆண் ஜாதகமா (அ) பெண் ஜாதகமா என்று கண்டறிய இயலுமா?......
    அதுபோல
    பிறந்த நேரம் ,கிழமை, அன்றைய சூரிய உதயம் இவற்றை கொண்டு பிறந்திருப்பது ஆணா (அ) பெண்ணா என்று கூற இயலுமா?.....
    அறிவியலுக்கு அப்பாற்பட்ட மாபெரும் இச் ஜோதிடத்தை நமக்கு தந்தருளிய நம் முன்னோர்களுக்கு நன்றி.................//////

    இதே கேள்வியை இதற்கு முன் பதிவிலும் கேட்டுள்ளீர்கள். அங்கேயே பதில் எழுதியுள்ளேன். சென்று பாருங்கள். ஒரு கேள்வியை ஒரு பதிவில் மட்டும் கேளுங்கள் சாமி!

    ReplyDelete
  10. பாடல் மிக அருமை ஐயா !!!
    நிறைய புதிர் போட்டிகளை நடத்துமாறு வேண்டுகிறேன் !!! அனுபவமே சிறந்த ஆசான் அல்லவே ஐயா !!!


    சிவச்சந்திரன்.பா

    ReplyDelete
  11. ////Blogger Sivachandran Balasubramaniam said...
    பாடல் மிக அருமை ஐயா !!!
    நிறைய புதிர் போட்டிகளை நடத்துமாறு வேண்டுகிறேன் !!! அனுபவமே சிறந்த ஆசான் அல்லவே ஐயா !!!
    சிவச்சந்திரன்.பா//////

    பார்க்கலாம்.உங்களின் யோசனைக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com