27.6.14

நெஞ்சம் எப்போது உருகும்?

நெஞ்சம் எப்போது உருகும்?
பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை, திரைப்பட நடிகர் சித்தூர்' திரு. V. நாகையா அவர்கள் பாடிய  'திருமுருகா என்று' துவங்கும் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

=======================================================
திருமுருகா .... என்று ... ஒருதரம் சொன்னால்
  உருகுது நெஞ்சம் ... பெருகுது கண்ணீர்
திருமுருகாவென்று ... ஒருதரம் சொன்னால்
  உருகுது நெஞ்சம் ... பெருகுது கண்ணீர்
(... திருமுருகா)

சிறுமதியால் உள்ளம் இருண்டிடும் வேளையில்
  அருளொளி வீசும் ஆண்டவன் நீயே
திருமுருகாவென்று ... ஒருதரம் சொன்னால்
  உருகுது நெஞ்சம் ... பெருகுது கண்ணீர்
(... திருமுருகா)

அப்பனும் பிள்ளையும் நீதான் ஐயா
  அடிப்பதும் அணைப்பதும் உன்கை தான் ஐயா
கற்பனை வாழ்வினில் கதி இனி ஏது
  கருணாநிதியே கதிர்வடிவேலா

திருமுருகாவென்று ... ஒருதரம் சொன்னால்
  உருகுது நெஞ்சம் ... பெருகுது கண்ணீர்

திருமுருகா, திருமுருகா, திருமுருகா.

பாடியவர் 'சித்தூர்' V. நாகையா - 'திருமுருகா என்று'
இசை:  C.N. பாண்டுரங்கன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. படத்தின் பெயரை விட்டு விட்டீரே! "எதிர்பாராதது" படத்தில் நாகையா பாடிய பாடல். வரிகள் யார் எழுதியதோ?

    ஆனால் இனிமை இருக்கும் போது நெஞ்சம்(உள்ளம்)எப்படி உருகும்?

    சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
    உள்ளமெல்லாம் உன் பெயரைச்
    சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!

    கந்தனருள் காப்பாற்றும். நன்றி.

    ReplyDelete
  2. நாகையா, ரெங்க‌ராவ்,டி கே பகவதி,டி கே ஷண்முகம்,சாரங்கபாணி, சுப்பையா,
    என் எஸ் கே, அடடா இவர்களையெல்லாம் உங்களைத்தவிர வேறு யாராவது நினைவில் வைத்துள்ளார்களா?

    பாடலுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. சிறந்த பாடல் பகிர்வு

    ReplyDelete
  4. சரவணபவ...1
    ச ... செல்வம்
    ர ... கல்வி
    வ ... முக்தி
    ண ... பகை வெல்லல்
    ப ... கால ஜெயம்
    வ ... ஆரோக்கியம்

    சரவணபவ...2

    ச ... மங்களம்
    ர ... ஒளி கொடை
    வ ... சாத்துவிகம்
    ண ... போர்
    பவன் ... உதித்தவன்

    சரவணபவ...3

    ச (கரம்) ... உண்மை
    ர (கரம்) ... விஷயநீக்கம்
    அ (வ)கரம்) ... நித்யதிருப்தி
    ண (கரம்) ... நிர்விடயமம்
    ப (கரம்) ... பாவநீக்கம்
    வ (கரம்)...ஆன்ம இயற்கை குணம்

    ReplyDelete
  5. மதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். இந்த சோதிடத்தை பற்றி தெரிந்துகொள்ள
    ஒறு காலத்தில் அவ்வளவு விருப்பம் இருந்தாது ஆனால் யாரும் அவ்வளவு
    எளிதில் கற்றுகொடுக்க விரும்பவில்லை
    அதனால் அது ஒரு ரகசிய பொருளாகவே இருந்தாது. இன்று அதை தமிழில் பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக்கி இணையதல மூலம் பலமனவர்களை உருவாக்கிய பெருமை அய்யா ஒருவரையே சேரும் இந்த இணையதளம் உள்ள வரைக்கும் தாங்கள் புகழ் நிலைத்திருக்கும் .மேலும் நானும் புதிய மாணவனாகவே சேர்ந்து பயன்ருகொன்று இருக்கேன் தாங்கள் சேவைக்கு நன்றி அய்யா

    ReplyDelete
  6. /////Blogger venkatesh r said...
    படத்தின் பெயரை விட்டு விட்டீரே! "எதிர்பாராதது" படத்தில் நாகையா பாடிய பாடல். வரிகள் யார் எழுதியதோ?
    ஆனால் இனிமை இருக்கும் போது நெஞ்சம்(உள்ளம்)எப்படி உருகும்?
    சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
    உள்ளமெல்லாம் உன் பெயரைச்
    சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
    கந்தனருள் காப்பாற்றும். நன்றி./////

    நல்லது. படத்தைக் குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////


    கந்தா...
    கடம்பா...
    கதிர்வேலா....
    கார்த்திகேயா......
    வருவாய்!
    அருள்வாய்!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    நாகையா, ரெங்க‌ராவ்,டி கே பகவதி,டி கே ஷண்முகம்,சாரங்கபாணி, சுப்பையா,
    என் எஸ் கே, அடடா இவர்களையெல்லாம் உங்களைத்தவிர வேறு யாராவது நினைவில் வைத்துள்ளார்களா?
    பாடலுக்கு நன்றி ஐயா!//////

    இருக்கிறார்கள். அதை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த பாடல் பகிர்வு////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  10. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    சரவணபவ...1
    ச ... செல்வம்
    ர ... கல்வி
    வ ... முக்தி
    ண ... பகை வெல்லல்
    ப ... கால ஜெயம்
    வ ... ஆரோக்கியம்
    சரவணபவ...2
    ச ... மங்களம்
    ர ... ஒளி கொடை
    வ ... சாத்துவிகம்
    ண ... போர்
    பவன் ... உதித்தவன்
    சரவணபவ...3
    ச (கரம்) ... உண்மை
    ர (கரம்) ... விஷயநீக்கம்
    அ (வ)கரம்) ... நித்யதிருப்தி
    ண (கரம்) ... நிர்விடயமம்
    ப (கரம்) ... பாவநீக்கம்
    வ (கரம்)...ஆன்ம இயற்கை குணம்/////

    சரவணபவ’ விளக்கங்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger raju maharajun said...
    மதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். இந்த சோதிடத்தை பற்றி தெரிந்துகொள்ள
    ஒறு காலத்தில் அவ்வளவு விருப்பம் இருந்தாது ஆனால் யாரும் அவ்வளவு
    எளிதில் கற்றுகொடுக்க விரும்பவில்லை
    அதனால் அது ஒரு ரகசிய பொருளாகவே இருந்தாது. இன்று அதை தமிழில் பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக்கி இணையதல மூலம் பலமனவர்களை உருவாக்கிய பெருமை அய்யா ஒருவரையே சேரும் இந்த இணையதளம் உள்ள வரைக்கும் தாங்கள் புகழ் நிலைத்திருக்கும் .மேலும் நானும் புதிய மாணவனாகவே சேர்ந்து பயன்ருகொன்று இருக்கேன் தாங்கள் சேவைக்கு நன்றி அய்யா////

    ஒரு 100 பேர்களாவது கற்றுத் தேர்ந்தால் போதும். அதுதான் என் விருப்பம்!

    ReplyDelete
  12. அய்யா தாங்கள் சொல்லுவது தாங்களிடம் முழுமையாக பயிற்சி பெற்று தாங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் அளவிற்கு தேறியவர்கள் வேண்டுமானால் அதுவாக இருக்கலாம் .ஆனால் என்போன்று தற்போது அடிப்படை கல்வி பயன்ருகொன்று இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் .மேலும் வருங்களாங்களில் வந்து பயன்று பயன் பெறுபவர்களின் எண்ணிக்கையும் பத்து ஆயிரத்தை தாண்டும் .ஒரு நல்ல நோக்கத்துடன் தாங்கள் தொடங்கிய இந்த சோதிட ஆன்மீக சேவை நிச்சயம் நல்ல மனிதர்களை சென்று அடைந்திருக்கிறது. மேலும் இது வற்றாத ஊற்றாக தாங்கள் இயக்கிகொண்டிருப்பதுதான் மிகவும் உற்சாகம் அடைய செய்கிதாது .தங்களின் இந்த சேவைக்கு எனது மணமார்ந்த நன்றி அய்யா.

    ReplyDelete
  13. //////Blogger raju maharajun said...
    அய்யா தாங்கள் சொல்லுவது தாங்களிடம் முழுமையாக பயிற்சி பெற்று தாங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் அளவிற்கு தேறியவர்கள் வேண்டுமானால் அதுவாக இருக்கலாம் .ஆனால் என்போன்று தற்போது அடிப்படை கல்வி பயன்ருகொன்று இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் .மேலும் வருங்களாங்களில் வந்து பயன்று பயன் பெறுபவர்களின் எண்ணிக்கையும் பத்து ஆயிரத்தை தாண்டும் .ஒரு நல்ல நோக்கத்துடன் தாங்கள் தொடங்கிய இந்த சோதிட ஆன்மீக சேவை நிச்சயம் நல்ல மனிதர்களை சென்று அடைந்திருக்கிறது. மேலும் இது வற்றாத ஊற்றாக தாங்கள் இயக்கிகொண்டிருப்பதுதான் மிகவும் உற்சாகம் அடைய செய்கிதாது .தங்களின் இந்த சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி அய்யா.////

    உண்மைதான். உங்களுடைய கருத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com