2.5.14

Devotional: தரணியைக் காத்தருளும் தவமணி!

 
Devotional: தரணியைக் காத்தருளும் தவமணி
பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை 'சூலமங்கலம்' சகோதரிகள்  பாடிய -  'சிவமணியால் வந்த தவமணி' என்ற பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------
சிவமணியால் வந்த தவமணி
(சிவமணியால் வந்த தவமணி ... அவன்தான்
சிங்காரத் தேமதுரத் தமிழ்மணி)
(சிவமணியால் வந்த ... )
செங்கமலம் பூமேலே தவழ்ந்த மணி

அன்னை சேர்த்தணைத்த பின்னால்
ஒன்று சேர்ந்த மணி
ஆறுமுகமான மணி ... அழகு தெய்வமணி

(சிவமணியால் வந்த ... )

கரந்தன்னில் வேல்பிடித்த வேலுமணி ... அவன்தான்
கருணை முகங்கள் கொண்ட அருள் மணி

தந்தைக்கு ப்ரணவம் சொன்ன குருமணி
அவன்தான் ...
தரணியைக் காத்தருளும் தனயன் சுப்ரமணி
தரணியைக் காத்தருளும் தனயன் சிவசுப்ரமணி
(சிவமணியால் வந்த ... )

சூரனை வெற்றிக்கொண்ட வீரமணி ... உலகை
சுற்றி வந்து தண்டு கொண்டு நிற்கும் ஞானமணி
ஒளவையை சோதித்து பார்த்த செல்வமணி
அவன்தான் ...
அருமறைகள் போற்றும் ... உலகின் கண்மணி
(சிவமணியால் வந்த ... )

இசையோடு கலந்திருக்கும் இசைமாமணி
இருமங்கையரை மணந்த கலைமாமணி
திருப்புகழ் பாடியப் புலவனை ... திருத்திய திருமணி
திருச்செந்தில் விசாக ... திருவிழாவின் ஷண்முகமணி
(சிவமணியால் வந்த ... )
சிவமணியால் வந்த தவமணி.   

'சூலமங்கலம்' சகோதரிகள் - 'சிவமணியால் வந்த தவமணி'
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. வணக்கம்

    நல்ல அருமையான பக்தி மாலை.
    இனிமையான குரலுடன் கேட்டு (youtube) ரசித்தேன்.
    மிக்க நன்றி.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்.

    ReplyDelete
  2. நல்ல பக்தி மணம் கமழும் பாடல். இதன் ஒளி/ஒலி வடிவம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com