17.1.14

தைப்பூசம்

 


------------------------------------------------------------------------------------------------------------------

தைப்பூசம்

ஆண்டு தோறும் தை மாதம் பெளர்ணமி திதியும் பூச நசத்திரமும் ஒன்றாகக் கூடி வரும் நன்னாளில் முருகப்பெருமானுக்கு, அவர் அருள் பாலிக்கும் எல்லா ஆலயங்களிலும் கொண்டாடப் பெறும் பண்டிகைதான் தைபூசத் திருவிழா. நம் நாட்டில் மட்டுமல்ல, அண்டை நாடுகளான இலங்கை, மலேசியா, மொரிசியஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார் ஆகிய தேசங்களிலும் அங்கே முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களிலும் முருக பக்தர்களால், கொண்டாடப் பெறுகின்றது.

அன்னை பராசக்தி தீய சக்திகளை அழிப்பதற்காக முருகப் பெருமானுக்கு வடிவேல் வழங்கிய நாளும் அதுதான். வைகாசித் திங்களில் பெளர்ணமித் திதியும் விசாக நட்சத்திரமும் ஒன்றாகக் கூடிவரும் நன்னாள்தான் முருகப்பெருமானின் அவதார நாளாகும். அதை மனதில் வையுங்கள்.

தைப்பூசத் திருவிழா பழநியம்பதியில் அதி விமரிசையாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து முருகப்பெருமானை - பழநிஅப்பனை வழிபடுவோம்.

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------------------
புஷ்பவனம் திரு.கே.முத்துசாமி அவர்கள் பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்
----------------------------


Our sincere thanks to the person who uploaded this song in the net
----------------------------------------------------------------------------------------------
நேற்றைய புதிருக்கான விடை:

படம் 1
முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களுடன் இருப்பவர்கள் பழம் பெருமை வாய்ந்த திரைப்பட நட்சத்திரங்கள்

இடமிருந்து வலம்: திருமதி.செளகார் ஜானகி. திருமதி. பி.சுசீலா, திருமதி.ராஜஸ்ரீ, திருமதி.அஞ்சலி தேவி, முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா, திருமதி.ஜமுனா, திருமதி.பி.சரோஜாதேவி, திருமதி.சுகுமாரி திரு.சோ.ராமசாமி, குமாரி சச்சு

படம் 2

பிரபல இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி

விடையைச் சரியாக எழுதிய அத்தனை பேர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றியும்
உரித்தாகுக!

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=========================================================

12 comments:

  1. சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Respected Sir,

    Thai poosam wishes to you and your family.

    Have a holy day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  3. இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்

    இவர் போல யார் என்று
    ஊர் சொல்ல வேண்டும்

    என்ற பாடலுக்கு இலக்கணமாய்
    என்றும் நம்முடன் வாழும் எம்ஜிஆர்

    பாடலையும் இன்றைய
    பதிவில் சேர்ப்பீர்கள் என

    எதிர்பார்த்தோம்
    எட்டாமாண்டை எட்டிய

    வகுப்பறையில் வலம் வந்தது
    வழக்கம் போல் அய்யன் பாடல்

    வாழ்க..
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  4. என்னோடு மகிழ்ச்சியாக
    எல்லாருமா அல்லது

    எல்லோரோடும் நான்
    எப்போதும் மகிழ்ச்சியாகவா

    விடை தெரிந்தது
    விளக்கமும் புரிந்தது.. ஆனால்

    இல்லை என்பது பதிலாக
    இருந்தால் நான் சரியாக

    இருக்கிறேன் என்பது பொருளா?
    இல்லை தவறாக இருக்கிறேன்

    என்பது பொருளா?
    என்ற விளக்கம் சொன்னால் நன்று

    ReplyDelete
  5. அழகன் முருகன் பற்றிய அருமையான பாடல்...

    ReplyDelete
  6. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...
    வாழ்த்துக்கள்.../////

    நன்றி தனபாலன்!

    ReplyDelete
  7. ////Blogger Sattur Karthi said...
    Good Morning Sir !/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சாத்தூர் நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Thai poosam wishes to you and your family.
    Have a holy day.
    With kind regards,
    Ravichandran M.////

    நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று
    ஊர் சொல்ல வேண்டும்
    என்ற பாடலுக்கு இலக்கணமாய்
    என்றும் நம்முடன் வாழும் எம்ஜிஆர்
    பாடலையும் இன்றைய
    பதிவில் சேர்ப்பீர்கள் என
    எதிர்பார்த்தோம்
    எட்டாமாண்டை எட்டிய
    வகுப்பறையில் வலம் வந்தது
    வழக்கம் போல் அய்யன் பாடல்
    வாழ்க..
    வாழ்த்துக்களுடன்../////

    வாழ்த்துக்களுக்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. ////Blogger வேப்பிலை said...
    என்னோடு மகிழ்ச்சியாக
    எல்லாருமா அல்லது
    எல்லோரோடும் நான்
    எப்போதும் மகிழ்ச்சியாகவா
    விடை தெரிந்தது
    விளக்கமும் புரிந்தது.. ஆனால்
    இல்லை என்பது பதிலாக
    இருந்தால் நான் சரியாக
    இருக்கிறேன் என்பது பொருளா?
    இல்லை தவறாக இருக்கிறேன்
    என்பது பொருளா?
    என்ற விளக்கம் சொன்னால் நன்று/////

    வழக்கம்போல குழப்புகிறீர்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  11. ////Blogger சே. குமார் said...
    அழகன் முருகன் பற்றிய அருமையான பாடல்.../////

    நல்லது. நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com