20.12.13

தென்கோடி தென்றல் தரும் ராகங்கள்

தென்கோடி தென்றல் தரும் ராகங்கள்

பக்தி மலர் 

 மாதங்களில் நான் மார்கழி என்றான் அந்த மாயக் கண்ணன். இன்று மார்கழி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. அந்தப் பரந்தாமனின் பகழை ஒரு பாடல் வடிவில் இன்று கொடுத்துள்ளேன். பாடலின் ஆக்கம் கவியரசர் கண்ணதாசன். பாடியவர் திரு.டி.எம்.செளந்தரராஜன். பாடலைக் கேட்டு மகிழுங்கள்!

அனைவருக்கும் தெரிந்த பாடல்தான். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை கேட்டு மகிழுங்கள்!

அன்புடன் 
வாத்தியார் 
----------------------------------------------------
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் 
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே 
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே - எங்கள் 
மதுசூதனன் புகழ் பாடுங்களே 

 (புல்லாங்குழல்) 

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் 
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே 
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் 
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே 

(புல்லாங்குழல்) 

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு 
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் 
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் 
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் 

 (புல்லாங்குழல்) 

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த 
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் 
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம் 
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் 

(புல்லாங்குழல்) 
---------------------------------------------
பாடலின் காணொளி:
Our sincere thanks to the person who uploaded this song in the net! 



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
===============================================

9 comments:

  1. காரைக்குடி தென்றல் தரும் ஜோதிட ராகங்கள் சுகமானவை.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. அற்புதமான பாடல், மனதை மயக்கும் இசை -
    என்னதான் தெரிந்த விஷயமாக இருந்தாலும், கேட்டதாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுத்துகொடுப்பதும், சொல்லுவதும் தான் மிக அருமையான விஷயம். நன்றி

    ReplyDelete
  4. மூங்கில்களை கூட கெஞ்சும் காலம்
    முன்னரே இருந்துள்ளது என தெரிகிறது

    கொடுப்பவர் எல்லாம்
    செய்பவர் அல்லர் அதனால்

    அடுத்தவர் புகழை நாம் பாடுபவராக இல்லாது
    அடுத்தவர் நம் புகழை பாடும் படி வாழ்வோம்

    ReplyDelete
  5. மனதை மயக்கும் பாடல்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  6. //////Blogger karuppiah Sakthi said...
    காரைக்குடி தென்றல் தரும் ஜோதிட ராகங்கள் சுகமானவை./////

    அப்படியா? நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது! ஏதோ சுகமாக இருந்தால் சரிதான். எனக்கும் மகிழ்ச்சிதான் மதுரைக்காரரே!

    ReplyDelete
  7. /////Blogger Raja Murugan said...
    அற்புதமான பாடல், மனதை மயக்கும் இசை -
    என்னதான் தெரிந்த விஷயமாக இருந்தாலும், கேட்டதாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுத்துகொடுப்பதும், சொல்லுவதும் தான் மிக அருமையான விஷயம். நன்றி////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger வேப்பிலை said...
    மூங்கில்களை கூட கெஞ்சும் காலம்
    முன்னரே இருந்துள்ளது என தெரிகிறது
    கொடுப்பவர் எல்லாம்
    செய்பவர் அல்லர் அதனால்
    அடுத்தவர் புகழை நாம் பாடுபவராக இல்லாது
    அடுத்தவர் நம் புகழை பாடும் படி வாழ்வோம்////

    இறைவனையும், அவன் அவருளால் புகழ்பெற்றவர்களையும் பாடுவதில் தவறில்லை வேப்பிலையாரே! கதவைத் திறங்கள். காற்று வரட்டும்!
    கதவை மூடிக்கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருக்காதீர்கள்!

    ReplyDelete
  9. //////Blogger சே. குமார் said...
    மனதை மயக்கும் பாடல்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குமார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com