26.7.13

சுடர் வருமா அல்லது இடர் வருமா?

 

சுடர் வருமா அல்லது இடர் வருமா?

பக்தி மலர்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே!

- அபிராமி அந்தாதிப் பாடல்

இந்தப் பாடலை, திரு.கெளசிக் அவர்கள் பாடுகின்றார். கேட்டு மகிழுங்கள்

சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ -  இல்லை எனக்கு
இடர் வருமோ


அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/V2qfhK9Xw1Y
Our sincere thanks to the person who uploaded the song in the net!



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. மிகவும் அற்புதமான பாடல்...

    தெய்வம் தானிருப்பதை இந்த மண்ணிலே நிரூபித்த வண்ணம் இருக்கிறது.. இருந்தும் சாம்ன்யர்களும், சந்தேகிகளுக்கும் அது அணுவும் புரிவதில்லை.

    அன்று அது போன்ற தொரு அருள்மழையை அபிராமி பட்டர் காலத்தே பொழியச் செய்த அந்த நினைவை வெளிக் கொணர்கிறது.

    இன்று ஆடி வெள்ளி அதனால் அம்மையின் பாடலே பதிவாகி இருக்கிறது!

    உண்மையிலே, இன்று நான் காலை 6.45 மணியளவில் படுக்கையிலிருந்து எழும் போது திருக்கடையூர் தேவியே என்று சொல்லிக் கொண்டே எழுந்தேன். அதே நேரம் தான் தாங்களும் இப்பதிவை எங்கே இந்திய நேரத்தில் வெளியிட்டும் இருக்கிறீர்கள்!!!

    ஒப்பிட்டுப் பார்க்க செய்தும் விட்டாள் அன்னையவள்.
    எனது இந்தப் பாடலை அவளின் திருப் பாதத்தில் சமர்பிக்கிறேன்.

    சிந்தையில் ஊறிடும் தேனே - மனப்
    பொந்தையில் நின்றாடிடும் பொன்மானே
    எந்தையின் இடப்பாகம் கொண்ட மீனே
    அன்னையே உனைப்பணியாப் பொழுதும்வீணே!

    அற்புதப் பதிவு பகிர்வு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. மாற்றம் சரி தான் ஆனால்
    மாறவில்லையே

    விஜய் டிவியையே
    வலம் வந்தால் எப்படி?

    ReplyDelete
  3. என்னதான் அன்பு மிகுதியாக இருந்தாலும் கடவுளை "சொல்லடி" என்று அழைப்பது சரியாக படவில்லை. மற்றபடி அருமையான பாடல்தான்.

    ReplyDelete
  4. /////Blogger Sattur Karthi said...
    kaalai vanakam ayya!////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  5. /////Blogger G Alasiam said...
    மிகவும் அற்புதமான பாடல்...
    தெய்வம் தானிருப்பதை இந்த மண்ணிலே நிரூபித்த வண்ணம் இருக்கிறது.. இருந்தும் சாம்ன்யர்களும், சந்தேகிகளுக்கும் அது அணுவும் புரிவதில்லை.
    அன்று அது போன்ற தொரு அருள்மழையை அபிராமி பட்டர் காலத்தே பொழியச் செய்த அந்த நினைவை வெளிக் கொணர்கிறது.
    இன்று ஆடி வெள்ளி அதனால் அம்மையின் பாடலே பதிவாகி இருக்கிறது!
    உண்மையிலே, இன்று நான் காலை 6.45 மணியளவில் படுக்கையிலிருந்து எழும் போது திருக்கடையூர் தேவியே என்று சொல்லிக் கொண்டே எழுந்தேன். அதே நேரம் தான் தாங்களும் இப்பதிவை எங்கே இந்திய நேரத்தில் வெளியிட்டும் இருக்கிறீர்கள்!!!
    ஒப்பிட்டுப் பார்க்க செய்தும் விட்டாள் அன்னையவள்.
    எனது இந்தப் பாடலை அவளின் திருப் பாதத்தில் சமர்பிக்கிறேன்.
    சிந்தையில் ஊறிடும் தேனே - மனப்
    பொந்தையில் நின்றாடிடும் பொன்மானே
    எந்தையின் இடப்பாகம் கொண்ட மீனே
    அன்னையே உனைப்பணியாப் பொழுதும்வீணே!
    அற்புதப் பதிவு பகிர்வு நன்றிகள் ஐயா!/////

    மனம் திறந்த உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  6. /////Blogger வேப்பிலை said...
    மாற்றம் சரி தான் ஆனால்
    மாறவில்லையே
    விஜய் டிவியையே
    வலம் வந்தால் எப்படி?/////

    சரி வலம் வருவருவதை வேறு திசைக்கு/ இடத்திற்கு மாற்றி விடுவோம்!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    NICE SONG GREAT SINGING//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger thozhar pandian said...
    என்னதான் அன்பு மிகுதியாக இருந்தாலும் கடவுளை "சொல்லடி" என்று அழைப்பது சரியாக படவில்லை. மற்றபடி அருமையான பாடல்தான்.//////

    தாய் என்ற உரிமையில் அப்படிப் பாடியிருக்கிறார். அதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள் தோழரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com