17.7.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 33

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 33

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 33

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
பூரட்டாதி நட்சத்திரம் 1, 2 & 3ஆம் பாதங்கள் மட்டும். இது கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்.இந்த நட்சத்திரம் குரு பகவானின் நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. ரோகிணி
2. மிருகசீரிஷம்
3. திருவாதிரை
4. மகம்
5. பூரம்
6. சித்திரை
7. மூலம்
8. பூராடம்
9.திருவோணம்
10. அவிட்டம்

ஆகிய 10 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் எந்த நட்சத்திரமும் மேற்படி குறிப்பில் இல்லைஆயில்ய நட்சத்திரம் பொருந்தாது. கும்ப ராசிக்கு  மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே மகர  ராசிக்கு உரிய நட்சத்திரமான திருவோணம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூரட்டாதி நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

பரணி, பூசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி  ஆகிய 5 நட்சத்திரங்களும் பொருந்தாது.

அஸ்விணி, ஆயில்யம், ஹஸ்தம், சுவாதி. அனுஷம், சதயம் ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++

3 comments:

  1. இது எத்தனையாவது பின்ஊட்டமென
    இந்த தொலைபேசி அழைப்பு சொல்லுமோ

    ஆனந்த முருகனுக்கு வாழ்த்துக்கள்
    ஆனது பல நாட்கள் உங்களை இங்கு பார்த்து

    ReplyDelete
  2. Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com